வேதியியல் ஆசானுக்கு,
வணக்கம் சார், என்ன ஞாபகம் இருக்கா சார்?
பனிரெண்டாவதுல எஸ்.ரெங்கசாமி பள்ளிகூடத்து ல முதல் மதிப்பெண் வாங்கினானே..அந்த செட் தான் நான்..ஏ செக்ஷன் ல கடைசி பெஞ்சுக்கு முந்துன பெஞ்சுல நடுவுல தான் நான் உட்கார்ந்து இருப்பேன்.உங்களுக்கு என்னையப் பிடிக்காது. எனக்கும் உங்களைப் பிடிக்காது, ஏன்னா நீங்க கேட்கும் மூலக்கூறு வாய்ப்பாடுகள் பெரும்பாலும் என்னை பார்த்தே இருக்கும்...இதனால் என் இருக்கையில் இருந்து கவனிச்சதை விட வாசல் நிலைக்கதவுக்கு முட்டு கொடுத்து கிளாஸ்ஸ கவனிச்ச நாட்கள் தான் அதிகம்... மேலும் நீங்க என்ன தான் நல்லா நடத்துனாலும் சிடு சிடு னு ரொம்ப கண்டிப்பான ஆள் என்பதுதான் என் வகுப்பில் இருந்த எல்லோருடைய பொது கருத்தும். நீங்க சீக்கிரமே வேலைய விட்டு போயிரனும்னு வேண்டிக்கிட்டவனுங்கள்ள நானும் ஒருத்தன்...மத்த வகுப்பில் எப்படி எல்லாமோ நாங்க இருந்த்தாலும் உங்க கிளாஸ் ல மட்டும் நாங்க அடங்கி ஒடுங்கி தான் இருப்போம்..
எப்போவும் வியாழக்கிழமை கடைசி கிளாஸ் தெய்வானை மிஸ்ஸோட தமிழ்,,ஆனால் ஏதோ முக்கியமா நடத்தனும்னு கடன் வாக்கிட்டு அன்னைக்கு வந்தீங்க.எனக்கு பின்னால காதர், சரவணன், ராம்குமார்,என் பெஞ்சுல நான் சதீஸ், கணேசன். எனக்கு முன்னால பெஞ்சுல அசோக், சிவா. செந்தில்..திடீர்னு என் சட்டய பிடிச்சு இழுத்து கையில ஒரு துண்டு பேப்பர குடுத்தான். படிச்சு பார்த்தப்போ ”லட்சுமி தியேட்டர்ல சீன் படம் போட்டுருக்காங்க உங்க பெஞ்சுல எத்தன பேரு வர்றீங்க” அப்படியே முந்துன பெஞ்சுலயும் குடுத்து கேட்க சொல்லி இருந்தது....
அன்னைக்கு சாயங்காலம் நாங்க ஒன்பது பேருல கணேசன் வரலைன்னு சொன்னான். ஏண்டானு கேட்டதுக்கு ”வீட்டு பக்கத்துல தியேட்டர் இருக்கு வந்த்தா மாட்டிக்குவேன்னு சொன்னதும் நான் தான் சொன்னேன்.,,,மகாராணி தியேட்டர்லயும் போஸ்டர் பார்த்தேன். அங்க போகலாம் ...இன்னைக்கு போனாதான் உண்டு நாளைக்கு வெள்ளிக்கிழமை படத்தை மாத்திருவாங்க” அது மட்டுமில்ல அடுத்த வாரம் அரைப்பரீட்சை வந்துரும் எங்கயும் போக முடியாதுன்னு சொன்னதால கணேசன் வருவதும் உறுதியானது.
இளயராணி மகாராணி என ரெண்டு தியேட்டர் ஓரே காம்ப்ளக்ஸில். இளயரானியில ஒரு முன்னனி நடிகரின் படமும் மகராணியில இரவு சுந்தரிகளின் போஸ்டரும் ஒட்டி இருந்தது,,,
எந்த படத்துக்கு போனாலும் சரவணனும் காதரும் தான் டிக்கெட் வாங்குவது வழக்கம்...ஆனால் இளயராணி தியேட்டருக்கு பெண்கள் கூட்டம் வருவதால் உள்ள போக சங்கடப்பட்டு கொண்டிருந்த போது தான் “கொஞ்ச நேரம் இளயராணி வாசல்ல நிப்போம் மகாராணி கவுண்டர் திறந்ததும் உள்ள போகலாம் என உட்கார்ந்தோம்...மகாராணி கவுண்டர் திறந்ததும் இளயராணியின் வாசலில் உட்கார்ந்த பாதி கூட்டம் மகாராணி கவுண்டரை நோக்கி தான்...
பசங்க எல்லோரும் தியேட்டருக்குள்ள போயிட்டாங்க..நான் மட்டும் எனக்கான டிக்கெட்டை வாங்கிட்டு சைக்கிளை நிப்பாட்ட போன போது தான் உங்களைப் பார்த்தேன்.நீங்க இளயராணிக்கு வந்துருப்பீங்க என்னப் பார்த்தா நானும் அதுக்குதான்னு சொல்லிக்குவோம்ன்னு நினைச்சேன்...நீங்க என்னய பாத்தீங்க ஆனா பேசலை,,ஒருவேளை நீங்க என்னைய இளயராணி தியேட்டர் ரசிகனாக நினைத்திருக்கலாம்....
நான் மகாரானியில் சீட் பிடித்து உட்கார்ந்த 5 ஆவது நிமிடம் தியேட்டர் காரரின் டார்ச் வெளிச்சத்தில்நீங்க. நான் சைக்கிள் ஸ்டாண்டுல நடந்தத எல்லாம் பசங்க கிட்ட சொன்னேன்...
6.30 மனி ஆயிருந்தாலும் படம் போட்ட மாதிரி இல்ல ,ஏ ஆப்பரேட்டர் என ஆப்பரேட்டரை நோக்கி ஏக வசனக்கள் வீசியது நாங்க தான்...”வந்திருக்குறது சீன் படத்துக்கு இதுல எதுக்கு இப்படி கத்துறாங்க”ன்னு பின் இருக்கையின் முனுமுனுப்புக்கள்...
எல்லா இருக்கைகளும் நிரம்பிய பின்னர் ஒருவழியாக படம் போடப்பட்டது,,,படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தான் சரவணன் கத்த ஆரம்பிச்சான் செபாஸ்டியன் சார், கெமிஸ்ட்ரி சார் வாழ்க என.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது
”டே அவரு என்ன பார்த்துருக்காருடா நீ இப்படி கத்துனா எல்லாத்துக்கும் ரிவிட்டுதான் என நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல..”அவரும் தானே படத்துக்கு வந்துருக்காரு அதுக்கு மேல ஏதாவது ஆச்சுனா பார்த்துக்கலாம்”. மேற்கொண்டு கத்த அரம்பித்தனர் எல்லோரும். டே ஆப்பரேட்டர் பிட்டு போடுயா என அவரும் திட்டு வாங்கி கொண்டிருந்தார்...எனக்கு ரொம்ப பயமாகி இருந்தது...டே இடைவேளைக்கு அப்பறம் பிட்லாம் இல்ல என எதேதோ சொல்லி எல்லாத்தயும் கிளப்பி வீட்டுக்கு வந்த்துட்டேன்.
மறுநாள் உங்களுக்கு பயந்து நான் பள்ளிக்கூடம் வரல ..பசங்க கிட்ட விசாரிச்சதுல நீங்களும் பள்ளிகூடம் வரலைன்னு சொன்னாங்க,,,,
சனி ஞாயிறு விடுமுறை கழிந்து லேசான தைரியத்தோடு பள்ளிக்கு வந்தேன்..முதல் வகுப்பு முடிஞ்ச பத்து நிமிஷத்துல ஒருத்தன் என் பெயரை சொல்லி கிளாஸ்க்கு வந்து செபாஸ்டியன் சார் கூப்பிட்டார்னு சொல்லிட்டு போயிட்டான்,
நான் உசுர கையில புடிச்சுகிட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தேன்.எவன் எவன் அன்னைக்கு தியேட்டருக்கு வந்த்தீங்க எல்லா பயலும் இப்போ வரனும் ன்னு சொன்னீங்க. ஒன்பது பேரும் உங்க முன்னால இருந்தோம்..
ஒன்பது பேரும் ரெண்டு வரிசயில நின்னு இருந்தோம்...எனக்கு பின்னல ராம் குமார் மறைஞ்சு நின்னான்...எல்லோரும் அமைதியா இருக்க ,ராம்குமார் கம்மெண்ட் அடிக்க என்னால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்...இதை பார்த்த உங்களுக்குகு இன்னும் பல்ஸ் எகிற பளாரென உங்களின் அஞ்சு விரல்களில் மூன்றின் ரேகை என் கன்னத்தில் இருந்தது...
முடிவாக இனிமேல் இந்த மாதிரி பன்ன மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்..
சாப்பிட்டு முடிஞ்சு எல்லாரும் திரும்ப வரனும்னு சொல்லியிருந்ததால இன்னும் பிரச்சன முடியல என பயந்துகிட்டே திரும்ப மதியானம் வந்தோம்...
மதியம் நீங்க வேற மாதிரி இருந்தீங்க,,என் தோளில் கை போட்டீங்க. ”வாங்க டா” என யானைக்கல் பக்கம்,ஒரு ஜூஸ் கடைக்கு எல்லாரயும் கூட்டி போயி மிக்சர் ஜூஸ் வாங்கி குடுத்தீங்க,,,நானும் செந்திலும் ம் சர்பத் வாங்கி கொண்டோம்..
தம்பிகளா நான் உங்கள வேனும்னு அடிக்கல,நீங்க திய்யேட்டர் ல என்ன பத்தி சொன்னதுக்கு கூட அடிக்கனும்னு தோனல..
அப்பறம் எதுக்கு சார் அடிச்சீங்க நீங்களும் தானே படத்துக்கு வந்தீங்க? என செந்தில் கேட்க
டே உங்க வயசுல நானும் எவ்வளவோ சேட்டை பன்னிருக்கேன்...இந்த படம் பார்த்தது எல்லாம் பிரச்சனை இல்ல...நானும் மனுஷன் தான் நீங்களும் மனுஷன் தான் .ஆனா அப்பரேட்டரை திட்டுனது தான் என்னால எத்துக்க முடியல.. நீங்க மதுரையில எந்த எந்தத் தியேட்டர்லலாம் படம் பார்த்துருக்கீங்கன்ன கேட்டீங்க. எல்லா தியேட்டர்லயும் பார்த்துருக்கோம்ன்னு அசோக் சொன்னான். நியூ சினிமாவுல படம் பார்த்துருக்கீங்களா?ன்னு கேட்டீங்க, இல்ல சார் அந்த தியேட்டர் ல இப்ப படம் ஓட்டுறது இல்லைன்னான் செந்தில்.
”என் வீடு முனிச்சாலையில தான் ...அப்பா சகாயம் ..ஆப்பரேட்டர் சகாயம் புள்ளைனு தான் என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க...நியூ சினிமாவுல தான் வேல...எனக்கு விவரம் தெரியாத வயசுல பிலிம் ரோல் தான் எனக்கு விளயாட்டுப் பொருள்...நான் எவ்வளவோ தடவ என் அப்பாக் கூட போக முயற்சி பன்னுனேன். ஆனா அவர் கூட்டிப் போகவே மாட்டார்..ரொம்ப அடம் பிடிச்சதால ஒரு நாள் கூட்டிட்டு போனார்..மதுரை வீரன் ஓடிக்கிட்டு இருந்துச்சு திடீர்னு கரண்ட் போயிருச்சு அவன் அவன் திட்ட் ஆரம்பிச்சாங்க, ஆப்ரேட்டர் அவனே இவனேனு...எனக்கு கோபம் கோபமா வந்துச்சு...என்னால எதுவுமே பன்ன முடியல...என் அப்பா கிட்ட்ட கேட்டதுக்கு இது எல்லாம் அப்படித்தான் சல்லி பயலுக வர்ற இடம் இதுக்கு தான் உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன்..இங்க நடக்குறத பத்தி வீட்டுல அக்கா கிட்டலாம் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட போது எனக்கு வயசு பத்து இருக்கும்....
என் அம்மா கல்யானம் ஆகுறதுக்கு முன்னால திய்ட்டருக்கு போனது. என் அக்கா ரெண்டு பெரும் அவங்களுக்கு கல்யானம் ஆகற வரைக்கும் தியேட்டருக்கு போனதே இல்ல..
நீங்க எல்லாம் முன் சீட்டுல இருந்து கடைசி சீட் வரை படம் பார்த்துருப்பீங்க...ஆனா நான் ஆப்பரேட்டர் ரூம் ல இருந்து பார்த்தவன்...ஒரு சிவாஜி படம் நல்ல கூட்டம் . திடீர்னு கரண்ட் போயிருச்சு ..கூட்டத்துல ஒருத்தன் ஆப்பரேட்டர் கேபினுக்குள்ள தண்ணி குடிக்கிற டம்ளர் விட்டு எரிஞ்சான்..அது வெட்டுனதுலதான் இந்த தலும்பு...
சினிமாவும் சினிமா தியேட்டருக்கும் பொழுதுபோக்க தான் போறோம்.அங்க யார் மனசும் நோகுறா மாதிரி நடந்துக்காதீங்க”னு சொல்லிட்டு போயிட்டீங்க....
அன்னைக்கு ஜூஸ் கடையில உங்கள பாத்தது தான் கடைசி..அதன் பிறகு அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு நாங்க பள்ளிக்கு வந்த போதும் உங்கள பார்க்க முடியலை.பசங்க எல்லாம் நீங்க அரசாங்க வேல கிடைச்சு போயிட்டத நினைச்சு நிம்மதியோட சந்தோசமா இருந்தாங்க..ஆனா எங்க ஒன்பது பேருக்கு மட்டும் அது பெரிய இழப்பாக இருந்தது...
எங்க ஒன்பது பேரில் இப்போ நான் செந்தில் சரவணன் என மூன்று பேர் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம்...ஒருமுறை திருச்சி பஸ்ஸ்டாண்டில் கணேசனை பார்த்தேன். புதுகோட்டையில் செல்போன் கடை வைத்திருப்பதாக் சொன்னான்...சரவணன் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான்...உங்களை போல கதாப்பாத்திரம் கண்டிப்பா அவன் படத்துல இருக்கும்னு உங்கள பத்தி பேசும்போது சொல்லுவான்... செந்தில் ஒரு கல்லூரியில ஆசிரியராக வெலை பார்க்கிறான்..என்னதான் தொண்ட தண்ணி கிழிய கத்துனாலும் நம்ம கெமிஸ்ட்ரி மாதிரி நடத்த முடியலைனு சொல்லுவான்..
நான் இப்போ சினிமா புரெஜெக்டர் பழுது மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தில் பொறியாளனாக இருக்கிறேன்...வேலை விஷயமாக ஏதாவது தியேட்டருக்கு போனா ஆப்பரேட்டர் ரூம் வழியாக திரையை பார்க்கும்போதெல்லாம் உங்க முகம் தான் எனக்கு வரும்..எங்கப்பா ஏன் அவரு வேலைபாக்கற இடத்துக்கு என்ன கூட்டிட்டுப் போகவே இல்லைன்னு நீங்க பேசினதுக்கப்பறம்தான் புரிஞ்சுது சார்.
அன்னைக்கு ஒரு பெயருக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தோம்...நிஜமா உங்க கிட்ட நேருல பேசனும்னு நினைச்சப்போ நீங்க வேலயில இல்ல...
இப்போ கேட்குறேன் சார்.
“என்ன மன்னிச்சுருங்க சார்”
இப்படிக்கு
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்
12 03 2006
- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
http://kaattchi.blogspot.com/2010/07/4.html
Tuesday, August 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment