”என்ன நண்பா எப்ப போன் அடிச்சாலும் எடுக்க மாட்ற என்னடா ஆச்சு”..இல்ல டா ஷூட்டிங் ல இருந்தேன் னு நன்பன் சொன்னான் என்னடா சினிமா கினிமா னு சொல்ர நடிக்க ஆரம்பிச்சுட்டயா? னு கேட்டேன் ..அட நீ வேற நம்ம ஊருல சினிமா ஷூட்டிங் நடக்குனுது டா அதான் போயிட்டேன்,,ரெண்டு நாலைக்கு முன்னால கேட்டப்பவும் இத் தானடா சொன்ன...பார்த்த படத்தையே பாக்க எரிச்சலா இல்லயா ? அது வேற படம் டா இது வேற படம்...நாளைக்கு கூட தெப்பக்குளத்துல ஒரு படம்னு கார்த்தி சொன்னான்...
இதுதான் மதுரைல இருக்குற நண்பனுக்கு போன் போட்டதில் கிடைத்த பதில்... ஆம் மதுரையும் அதனை சுற்றியும் இப்பொது பத்துக்கு மேற்பட்ட தமிழ் சினிமாக்கள் எடுக்கப்பட்டு வருகிறது....
.
மதுரையை நோக்கி படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு..
முதலில் செட் போட்டு படம் பிடித்து பின்னர் வெளிப்புறப்படப்பிடிப்புக்காக கோயம்புத்தூர் பொள்ளாச்சியே கதியென கிடந்த தமிழ் சினிமா மதுரைக்கு எடுத்து வந்தது மகிழ்ச்சி ,வந்த்தற்கு நன்றி .... தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மதுரைக்கும் பெரும் பங்கு இருப்பதை நீங்க மரக்க மாட்டீர்கள்///வெள்ளிக்கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனதும் மதுரைல எப்படி போகுதுன்னு தான் உங்கலோட எதிர்பார்ப்பு இருக்க ஆரம்பித்தது...உங்களின் இலக்கான பி மற்றும் சி செண்டர் ரசிகன் அதிகம் இருப்பதும் இங்கு தான்..
மற்ற ஊர்களை போல இங்கே பொழுதை கழிக்க பார்க்கோ பீச்சோ இல்லை..பார்த்து பழகி போன மீனாட்சி அம்மன் கோவிலும் நாயக்கர் மகாலும் தான் எங்களை சினிமா தியேட்டரை நோக்கி நடக்க வைத்தவை...பெரிய நடிகர்களின் படஙள் கூட சென்ன்னை போன்ற நகரங்களில் பகல் காட்ட்சி இரவு காட்சி என திரையிடப்பட்ட போது இங்கே சாதாரனமாக தினசரி நான்கு காட்சிகளை திரையிடுவதும் இங்கே தான்.. பெரியாஸ்பத்திரி வளாகத்தில் ஜிகினா ல எழுதி வைக்கப்பட்ட கேப்டன் பிரபாகரன் கட் அவுட்களையே வெறிக்க பார்த்தவர்களும் இங்கே தான்,,,
சினிமா தியேட்டர்களை பொறுத்தவரை இங்கே இருக்க தங்கம் தியேட்டர் தான் ஆசியாவிலேயே பெரிய ரெண்டாவது தியேட்டர்னு உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல...இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்கள் மூடு விழா கண்டு கல்யாண மண்டபங்கள் ஆகி போன நிலையில் இங்கே மட்டும் பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் மீண்டும் புது பொலிவு பெற தொடங்கின ,,, சுந்தரம் தியேட்டர் கனேஷ் தியேட்டர் தேவி கலைவானி ஜெயா தமிழ் இளையரானி மகாரானி என பத்தை தாண்டும்..இதற்கு உங்களின் கைம்மாறு மதுரையையும் மதுரைக்காரனையும் ஒரு கூலிப்படை அளவுக்கு சித்தரிக்க தொடங்கி விட்டிர்கள்..
மதுரை போன்ற பகுதிகளில் படப்பிடிப்புக்கு தொந்தரவு இருக்கும் என நினைத்தே இங்கு வர மறுத்த நீங்கள் இங்கே படை எடுக்க தொடங்கியதும் கிட்டத்தட்ட வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்தது போல தான்,,,,.
கும்பக்கரை தங்கையா படத்துல ஒரு பாட்டுல ஒரமா வந்துட்டு போன சோலயம்மா கிழவிக்காக அந்த படத்த பார்த்தவனுங்க எங்க ஊருக்கரன்க...ஆரம்பத்தில் மதுரையை பற்றி திரையில் நீங்கள் சொல்லும் சின்ன சின்ன வசனக்களுக்கு கை தட்டியும் ,ஏரியல் வியூவில் காட்டப்படும் கோரிப்பாளயத்து ரவுண்டானாவும் வைகை பாலமும் நான்கு கோபுரத்துக்கும் விசில் அடிக்க தொடங்கினோம்...தேசிய விருது பெற்ற ஹௌஸ்ஃபுல் படமும் இங்கே படம் பிடிச்சது தான்...ரெட் படத்த மதுரை போல செட் போட்டு எடுத்தீங்க அதுக்கே அந்த படம் மதுரைல மட்டும் அண்ணாமலை தியேட்டர்ல 90 நாள் ஓடியது... அதன் பிறகு அவ்வப்போது மதுரைக்குள்ள வர ஆரம்பிச்சீங்க தமிழ்,குத்து.தூள் என மதுரையை கதை களமாக கொண்டு எடுத்தீங்க
இப்படி கண்மாயில வர்ற அயிரை மீன் மாதிரி சீசனுக்கு வர ஆரம்பிச்ச நீங்க ..ஆனா இப்போ தலைப்பிரட்டை கிடச்சா கூட அள்ளிட்டு போயிரலாம்னு கிளம்பிட்டீங்க
அதன் பிறகு தான் கில்லி படத்துல திரும்பவும் வந்தீங்க...அப்போ எடுத்த அருவா தான் இன்னும் நீங்க கீழ வைக்கவே இல்ல...கில்லி படம் வ்ந்த போதே மதுரை வீதிகளில் அதற்கான கண்டன போஸ்டர்கள் அடிக்கப்பட்டது கூட உங்களுக்கு நினைவிருக்கலாம்....முத்தக்காட்சியை நம்பிய நீங்கள் மதுரையின் அருவாள் மூலமான ரத்தக்காட்சியையும் நம்ப ஆரம்பிச்சீங்க... விருமாண்டி, காதல், என தொடர்ந்தது..கூடவே டி ராஜேந்தர் தன் படங்களுக்கு ஒன்பது எழுத்த்துல பெயர் வைக்கிறமாதிரி மதுரைல படம் டுத்தா அது ஹிட் அப்படி என்கிற உங்கள் சினிமா செண்டிமெண்டும்.. அமெரிக்காவுல படம் எடுக்குற திரு கவுதம் மெனன் கூட வேட்டயாடி விளையாட ,ஏ செண்டருக்கு படம் எடுக்குற வெங்கட் பிரபு கோவாவுக்காக மதுரை வந்தனர்...
காதல் ,விருமாண்டி ,திமிரு.காளை.,மதுரை வீரன்.கூடல் நகர்,வெயில்,சிவப்பதிகாரம்,தாஸ் கருப்பசாமி குத்தகை தாரர் என்றாகி போனது....இந்த சமயத்தில் தமிழ் சினிமாவும் அழகி ஆட்டோகிராப் என யதார்த்த சினிமா பக்கம் திரும்பியது.பருத்தி வீரன் வெளியானதும் சுப்ரமனியபுரம்...இந்த ரெண்டு படத்தையும் ஏத்துகிட்டது தான் தான் தமிழ் ரசிகன் பன்னுன தப்பு..ஆட்டோவுல தூக்கி போட்டு கழுத்த அறுத்ததற்கு கை தட்டினோம் என்பதற்காக தானே அடுத்தடுத்து., நாலு நாள் வளர்ந்த தாடியுடன் ஏத்திக்கட்டிய கைலியுடன் நாளு அருவாளோடு உங்கள் படங்களுக்கு விளம்பரப்பதாகைகள் வைக்க ஆரம்பிச்சீங்க...விளைவு
செட் போட்டு எடுக்க வேண்டிய டி.வி சீரியல் கூட மதுரையில் படம் பிடிக்கப்பட்டன ..அதன் டி ஆர் பி ரேட்டும் எகிறத்தொடங்கியது.....ஆம் விஜய் டிவியின் மதுரை யும் தெக்கத்தி பொண்ணு ம் அதற்கு சான்று
மதுரை சம்பவம் ரேனிகுண்டா ஜெயங்கொண்டான் வைகை மதுரை தேனி வழி ஆண்டிப்பட்டி, மாட்டுத்தாவனி மாத்தியோசி கோரிப்பாளையம் என சித்திரை திருவிழாவுல அழகர் கோவில் உண்டியல் களும் தேர் பவனி வரும் வீதிகளில் எல்லாம் உங்கள் கேரவன்களும் சினிமா சாதனங்களும் வளைய வந்தன,,, மதுரை நகர பகுதிகளையும் தலைப்பாக மாற்றின பெருமை(?) ....விட்டால் குட்ஷெட் தெரு(மன்னிக்கனும் இந்த பேரு வச்சா உங்களுக்கு வரி விலக்கு கிடக்காது அதனால வைக்க மாட்டீங்க)தானப்ப முதலி தெரு .வக்கீல் புது தெரு நு பேரு மண்மலை மேடு நு பேரு வச்சுருவீங்க போல..........
தூங்கா நகரம் ,மயிலு.சிக்கு புக்கு,
ஆடுகளம்,மாட்டுத்தாவனி ,
அயிரம் விளக்கு, மிளகா,பூக்கடை ரவி
இன்னும் பெயர் சூட்டாமல் மதுரை சுற்றி படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு தான் இருக்கின்றன,,,,
கிட்டத்தட்ட மதுரை ய ஒரு கொலையாளிகளின் கூடரமாகவே மாத்திட்ட்டிங்க...கேட்டா மதுரை மண்ணு இப்படித்தான்னு மதுரைக்காரனுக்கே பாடம் சொல்ல்றீங்க .வீரம் வெளஞ்ச மன்னு.பாசமானவங்கெ ஆனா மோசமானவங்கெ...நீங்க சொல்றதெல்லாம் என்னவோ உன்மை தான் ஆனால் வீரம் நு நீங்க எதை சொல்றீங்கனு தான் புரியல....வாடி வாசல் ல காளையா அவுத்து விட்டா அது திமில உசிப்பி நின்னு விளயாடும் போது அடக்குவோம் அது தான் வீரம். நீங்க வீரம் நு சொல்ற து எப்படி என்றால் மாட்டுக்கே தெரியாமல் மாட்டோட கழுத்த அறுக்குறது தான்,அதுப்போல தான் மதுரைக்காரனின் வீரம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு ஊரெல்லாம் பரப்ப ஆரம்பிச்சீங்க....அருவாளை காட்டி யதார்த்தம் நு சொல்றீங்க...ஆனால் நீங்க இங்க மையமா வச்சு எடுத்த எந்த படமும் ஒன்றுக்கு ஓன்று தொடர்பு இல்லாமல் எடுத்து எங்களை கட்டி போட்டிங்க,,ஆனால் பள்ளிகூடத்துல காய்ச்சல் வந்தாலும் தலி வலி வந்தாலும் முதல் உதவி பெட்டியில இருந்து எடுத்து குடுக்குற கால்பால் மாத்திரை மாதிரி எல்லா கதைக்கும் அருவாளை பிரதானம பயன் படுத்தா ஆரம்பிச்சீங்க,,,,மதுரைய இப்படி காட்டுனா தான் பார்க்குறாங்க நு சொல்றீங்க,,,,ஏன் வெண்ணிலா கபடி குழு நு படம் மதுரைய களமா வச்சுத்தான் அந்த படமும் 100 நாள் படம் தானே.....
இந்தாரு,,,, அவிங்கெ.. இப்படி படத்துக்காக குரல் மொழியும் உடல் மொழியும் மாத்தனும் நு ஜெயங்கொண்டான் படத்துல பாவனா மதுரை தமிழ் பேசவச்சு சர்க்கஸ் காட்டுநீங்க
,,,
சமீபத்துல வெளியான படத்தை பார்த்துட்டு ரெண்டு பேரு பேசுனது தான்...” ஏண்டா ஊருக்கே அருவா அடிக்கிறோம் நம்ம திருப்புவனத்துல கூட இவ்ளோ அருவா இல்லட நு ...”
அருவா தூக்குவதற்கு அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்காகவே அருவாளும் வேல்கம்பும் படைக்கப்பட்டது போல கொண்டாடுனீங்க,,,,,மதுரைல வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியலயா? இல்ல மத்தவனுக்களுக்கு அருவா புடிக்க தெரியாதா?
முன்பெல்லாம் வெளியூர்ல வேல பார்க்குறா மதுரைக்காரனுக்கு தனி மரியாதை இருந்துச்சு,,,இப்போ மதுரைக்காரன பார்த்து தான் இருக்கனும் நு பேசுறாம்க்கெ...ஜல்லிக்கட்டு நடக்குறதும் இங்க தான் மல்லிகை பூவுக்கும் மதுரை தான்,,,
யாரோ சொன்ன முகவரியில மதுரைக்கு வந்தீங்க..ஆனா அவங்க போன பாதைல போறீங்களே....மதுரைக்கு படம் எடுக்க வராதீங்கனு சொல்லல...வன்முறை ய படமா எடுக்குறது உங்க தொழில்,அத செய்யாதிங்னு சொல்றதுக்கும் எங்களுக்கு உரிமை இல்லை
ஆனால் மதுரை அப்படி கிடயாது அதனால் மதுரைய அப்படி சித்தரிக்காதீங்கனு சொல்றதுக்கு தகுதி இருக்கு,,
உங்கள் பாஷை ல சொல்லனும்னா ,நானும் மதுரைக்காரன் தான்....
Saturday, June 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment