Thursday, May 12, 2011

அழகு

என்னை ஒருத்தி அழகென்று
சொல்லிவிட்டாள் என்றேன்
சட்டென்று என் தலைமுடி களைத்தாய்
உதட்டுச்சாயம் கொண்டு முகத்தில்
கோலம் கிறுக்கினாய்
உதட்டைக்கடித்து வீங்கவைத்தாய்
சித்திரை திருவிழாவின்
பாதி வேஷம் போட்ட
பபூன் போல் இருந்தேன்.
உன் வலக்கைக்கு தோதாக
என் கன்னம் இருந்த்ததால்
அஞ்சு விரலையும் பதித்து
வலிக்காமல் இருக்க
முத்தமும் குடுத்தபோது
"நான் எப்படி இருந்தாலும் ரசிப்பவள்
நீ மட்டும் தான் "என்பதை என்னால்மறுக்கமுடியாது

No comments: