அன்புள்ளநண்பன் எம்.ராமக்கிருஷ்ணனுக்கு ...
நான் தான் பனியாரம். நல்லா இருக்கியா டா. நீ எனக்கு வச்ச பட்ட பேரு இன்னும் மாறவே இல்ல. எங்கடா இருக்க...? நல்லா இருக்கியா?. நமக்குள்ள அறிமுகம் ஆனதுக்கு பெரிய காரணம் எல்லாம் ஒன்னும் இல்ல. நீயும் நானும் நண்பர்களாக இருந்ததற்கு நம் இருவரின் மாமன்கள் தான் முதற் காரணமாக இருந்தனர். என் மாமாவும் உன் மாமாவும் மேலூரில் கக்கன் நினைவுக்குழு நடத்திய கடைசி கபடி போட்டி வரை ஜெயா கபடிகுழுவின் பிரதான வீரர்கள். அவர்கள் ஆரம்பித்த நட்பு நமக்குள்ளும் தொடர ஆரம்பித்தது.
காலையில் என் வீட்டிலிருந்து நானும் உன் வீட்டிலிருந்து நீயும் கையில ரெண்டு தூக்கு வாளிய எடுத்துக்கிட்டு செக்கடியில பாரதி டீக்கடையில் காபியும் பாஸ்கரன் ஆஸ்பத்திரி பக்கத்து பருத்தி பால் கடையில பருத்திப்பாலும் வாங்கியதில் தொடங்கிய சிநேகம். எங்க வீட்டுக்கு பக்கத்துல ஐஸ் கம்பெனி அதுக்கு பக்கத்துல செட்டியார் வீடு அதுக்கு பக்கத்து வீடு உங்க வீடு.
இதை எல்லாத்தயும் விட ஒரு நாள் காவியம் மனிக்காவியம் விளயாடிய போது உன் முதுகில் லாகு சொல்லும்போது ஓங்கி அடித்ததற்கு நீ கல்லை விட்டு எறிஞ்சு என் மண்டய உடைச்சுட்ட. ரொம்ப பயந்து போயி காபி தூள் வாங்கி வந்து அதற்கு முதல் உதவி செய்தவனும் நீ தான். என் மேல ”கொக்கே கொக்கெ மந்திரம் போடு ,. ரெண்டு மைனா பார்த்தா நல்லது ஒத்த மைனா பார்த்தா கெட்டது நடக்கும்,,, கொடிக்கா பழ விதைய உரிக்கும்போது சரியா அதன் தோலை உரித்தால் நினைச்சது நடக்கும் ...ஒட்டு புல்ல உடைத்து சரியா மீண்டும் இனைத்தால் பரீட்சையில பாஸ் ஆயிருவோம் என அந்த வயது நம்பிக்கைகளை கற்றுக்கொடுத்தவன் நீ தான்...
ரெண்டு கோடு நோட்டுல நா எழுதிட்டு வராத நாட்களில் என்ன வாய்க்குள்ள விரல விட்டு வாந்தி எடுக்க வைத்து சத்யா மிஸ் கிட்ட காப்பாத்துவதும், உன் ரேங்க் கார்டுல நான் கையெழுத்து போட்டு மாட்டிக்கிட்டோம். அதற்கு தண்டனையாக முட்டிக்கால் போடும் போது செருப்பை குடுத்து அதன் மேல் முட்டிக்கால் போட்டதும், நாலாவது கால் பரீட்சையில கல்கத்தாவின் விமான நிலையத்தின் பெயர் டம் டம் என நான் எழுதிக்குடுத்ததை வித்யா மிஸ் பார்த்து ரெண்டு பேருக்கும் 5 மார்க் குறைத்தது, உன் தங்கச்சி இலக்கியாவ தூக்கி கொஞ்சுரதுல எனக்கும் என் மாமா மகளுக்கும் சண்டை வரும்போது அவளின் வளையலை நான் உடைப்பது உனக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்..
நாலாவது முழு பரீட்சை லீவுல நீ சூரக்குண்டு ல உன் தாத்தா வீட்டுக்கு போயிட்ட, அப்போ அங்க இருந்து எனக்கு சித்திரை வருஷ பிறப்புக்கு வாழ்த்து அட்டை அனுப்பி இருந்த, அப்போவெல்லாம் போஸ்ட் மேன் வீட்டுக்கு வந்தா பெரியவங்களுக்கு மட்டும் தான் லெட்டர் வரும். எனக்கு தனி ஆளா முதன் முதலில் கடிதம் வந்தது உன்கிட்ட இருந்து தான். அன்னைக்கு நா குடுத்த அலப்பறைக்கு அளவே இருக்காது எனக்கு லெட்டர் வந்துருக்கு எனக்கு லெட்டர் வந்துருக்குனு சின்ன தம்பி படத்துல எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணாம்னு சொல்ற மாதிரி வீட்டுக்குள்ள கத்திட்டு இருந்தேன். ரெண்டு நாளைக்கு முன்னால என் மாமா மகள் கூட சண்ட போட்டு அவ வளையல் நான் உடைச்சிருந்தேன். அதுக்கு பழி வாங்குவதாக நினைத்து நீ அனுப்புன லெட்டர படக்குனு பிடுங்கி கிழிச்சு போட்டுட்டா. கோபமும் அழுகையுமாய் பதிலுக்கு அவள கடிச்சு வச்சுட்டு கிழிஞ்ச லெட்டர ஒன்னு சேர்த்து உன் முகவரியை சேர்த்தேன். எம்.ராமக்கிருஷ்ணன் சின்ன சூரக்குண்டு இது மட்டும் தான் என்னால சேர்க்க முடிஞ்சது. அத வச்சிக்கிட்டு உனக்கு லெட்டர் இப்படி தான் எழுதினேன் ..
“உனக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நீ எப்ப இங்க வருவ...
போன வாரம் எங்க வீட்டுல எல்லாரும் பொருட்காட்சி போயிட்டு வந்தோம்...
நல்லா இருத்துச்சு..
அப்புறம் என் வெல்ட் ஆனி பம்பரக்கட்டை கொண்டையில அழகு பாண்டி நங் நங் நு நாலு ஆக்கர் வச்சுட்டான்.பதிலுக்கு நானும் அவன் கட்டய பொறிச்சுட்டேன் மற்றவை நேரில்”
என எழுதிய கடிதம் சரியான முகவரி இல்லாமல் திரும்ப எனக்கே வந்துருச்சு. நீயும் லீவு முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்ட,உன்ன நேருல பார்த்தே குடுத்துட்டேன்.
நாம அஞ்சாவது போக ஆரம்பிச்சதுல இருந்து உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வந்து உன் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போன காரணத்தால அடிக்கடி லீவு போட ஆரம்பிச்ச. அப்பா சீட்டு விளயாட போறத அம்ம கேட்டதுக்கு அடிக்கிறாரு மாமா கேட்டாலும் சண்ட போடுறாரு...என உன் தரப்பு காரணங்கள். தூர்தர்ஷன் ல ஒரு நாள் படிக்காதவன் படம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப நானும் இது மாதிரி ஓடி போக போறேன்னு நீ சொன்னது எனக்கு பெரியதாக தெரியவில்லை ....
ஒரு நாள் சஞ்சாயிகா பணம் எல்லாருக்கும் திரும்ப பட்டுவாடா செய்யப்பட்டது. எனக்கு 52 ரூபாயும் உனக்கு 62 ம் ஞாபகம். அன்னைக்கு சாயங்காலம் என் கூட நீ வீட்டுக்கு வரல “ரைஸ் மில்லுல மாவு வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு போனவன் தான் அதுக்கு பிறகு இன்று வரை நீ திரும்பவே இல்லை..”
அன்று இரவு 8 மணி என்னிடம் ஆரம்பித்த உன்னை பற்றிய விசாரனை என்னிடம் .”நீ ரைஸ்மில்லுக்கு போயிட்டு வர்றத சொன்னதை உன் மாமா கிட்ட சொன்னேன். அங்கே விசாரித்ததில் நீ பையை மட்டும் அங்கே வச்சுட்டு போனதாகவும் முத்தையா அண்ணன் சொல்லி இருக்கிறார் .தொடர்ந்து சுந்தரப்பான் கண்மாய் பெரியா ஆத்துக்கால் தெப்பக்குளம் டியூஷன் மிஸ் வீடு என உன்ன தேட ஆரம்பிச்சாங்க..
உன்னை யாரும் கடத்திட்டு போயிட்டானுங்களோனு பயந்தாங்க ,ஜாதகக்கோளாறு தான் நீ ஓடி போயிட்ட எனவும்,ஜோசியக்கார்,குறி சொல்றவர் மை பார்க்குற ஆள் என எல்லா இடத்துலயும் உன்ன கண்டு பிடிக்க முயற்சித்தும் பலன் இல்லை என உன் மாமா எங்க வீட்டுல புலம்பிகிட்டு இருப்பாரு. உன் தங்கச்சி எந்த விவரமும் தெரியாம விளயாடிக்கிட்டு இருக்கும். உன் தங்கச்சி இலக்கியாவுக்கு ஆசை சாக்லேட் பேப்பரும் சாக்பீசையும் வச்சு நீ செஞ்சு குடுத்த பொம்மையை இன்னும் பத்திரமா வச்சுருக்குது டா.
நீ போனதுக்கு அப்புறம் நல்ல பாம்பும் சாரப்பாம்புமா திரிவீங்களே உன்ன விட்டுட்டு அவன் போயிட்டானா.உன்கிட்ட சொல்லாம போயிருக்க மாட்டான் டா என என்னிடம் உன்னை பற்றிய விசாரிப்புகள் நம் தெரு பையன்களிடம் இருந்தது.உனக்காகவே சீம்பால் கொண்டுவந்த கார்த்திகா மிஸ் அதன் பிறகு கொண்டு வருவதே இல்லை...
உன் அப்பாவும் எல்லா பழக்கத்தையும் விட்டுட்டதா கேள்விப்பட்டேன். ரொம்பவே மாறி இருந்தார் உன் அம்மா தான் நீ வந்துருவ வந்துருவனு புலம்பித்தவித்த அவர் நம்பிக்கை பொய்த்துபோனது. அதன் பிறகு ஒவ்வொரு மார்ச் மாதம் 8 ம் தேதியும் உன் பிறந்த நாளில் யாருக்காவது துணி எடுத்து குடுத்து உனக்கு குடுக்குற மாதிரியே காலத்தை கழிச்சிக்கிட்டு இருக்காங்க.
உன் தங்கச்சி கார்த்திகா 12 வரைக்கும் படிச்சுச்சு. இப்போதான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிவகங்கை ல இருந்து மாப்பிள்ள b.sc படிச்சுட்டு சொந்தமாக காய்கறி மண்டி வச்சுருக்காப்ள. நல்ல குணம். பேரு முத்துகுமார். கல்யாணம் முடிஞ்சுருச்சு. வீட்டுக்கு வளைகாப்புக்கு வந்தப்போ பேச்சுவாக்குல உன் புள்ளைக்கு என் மடியில வச்சு காது குத்துவீங்களானு ரெண்டு பேருகிட்டயும் கேட்டேன். சொன்ன மாதிரியே ரெண்டு மாசத்துக்கு முன்னால நம் மருமகளுக்கு என் மடியில வச்சு சிவன் கோவில்ல காதணி விழா சிறப்பா நடந்துச்சு. பிள்ளைக்கு பேரு கிருஷ்ணவேனி டா.....
என் வீட்டுக்கு நான் ஒத்த புள்ள.ஒத்த குரங்காவே வளர்ந்துட்டேன். திடீர்னு இலக்கியா மப்பிள்ள எனக்கு தாய்மாமன் பதவி குடுத்து சபையில நிப்பாட்டிடாப்ள... என் வாழ்வில் சந்தோஷத்தின் போது அழுத நாட்கள் மிக குறைவு. அதில் அந்த காதணி விழாவும் ஒன்னு டா... சத்தியமா எனக்கு அழுகையும் சந்தோஷமும் இருந்துச்சு டா... என்ன, அன்னைக்கு நிலமைக்கு என் கையில 130 ரூபாய் தான் இருந்துச்சு. அவளோட அடுத்த பொறந்த நாளுக்குள்ள அரைப்பவுனுக்கு தோடு எடுத்து போடனும்னு எண்ணம் இருக்குடா..
இது எல்லாமே உன்னால எனக்கு கிடைச்ச சந்தோசம் டா நண்பா... என இதிலும் கூட ஒரு சுயநல வாதியாக தான் நான் இருந்திருக்கிறேன். எப்படி டா உனக்கு வீட்டை விட்டு ஓடி போகனும்னு தைரியம் வந்துச்சு. உன் மனசுக்கும் திறமைக்கும் நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்ப டா. எனக்கும் என் மாமாவோட ரெண்டாவது பொண்ணுக்கும் பேசிட்டு இருக்காங்க...முடிஞ்சா இந்த கல்யாணத்துக்காவது வந்துட்டு போடா.......
இன்னும் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்ற நம்பிக்கையில் உன் நண்பன் “பனியாரம்”
வெளியிட்டதற்கு நன்றி
காட்சி
http://kaattchi.blogspot.com/2010/08/blog-post.html
Tuesday, August 3, 2010
வேதியியல் ஆசானுக்கு,
வேதியியல் ஆசானுக்கு,
வணக்கம் சார், என்ன ஞாபகம் இருக்கா சார்?
பனிரெண்டாவதுல எஸ்.ரெங்கசாமி பள்ளிகூடத்து ல முதல் மதிப்பெண் வாங்கினானே..அந்த செட் தான் நான்..ஏ செக்ஷன் ல கடைசி பெஞ்சுக்கு முந்துன பெஞ்சுல நடுவுல தான் நான் உட்கார்ந்து இருப்பேன்.உங்களுக்கு என்னையப் பிடிக்காது. எனக்கும் உங்களைப் பிடிக்காது, ஏன்னா நீங்க கேட்கும் மூலக்கூறு வாய்ப்பாடுகள் பெரும்பாலும் என்னை பார்த்தே இருக்கும்...இதனால் என் இருக்கையில் இருந்து கவனிச்சதை விட வாசல் நிலைக்கதவுக்கு முட்டு கொடுத்து கிளாஸ்ஸ கவனிச்ச நாட்கள் தான் அதிகம்... மேலும் நீங்க என்ன தான் நல்லா நடத்துனாலும் சிடு சிடு னு ரொம்ப கண்டிப்பான ஆள் என்பதுதான் என் வகுப்பில் இருந்த எல்லோருடைய பொது கருத்தும். நீங்க சீக்கிரமே வேலைய விட்டு போயிரனும்னு வேண்டிக்கிட்டவனுங்கள்ள நானும் ஒருத்தன்...மத்த வகுப்பில் எப்படி எல்லாமோ நாங்க இருந்த்தாலும் உங்க கிளாஸ் ல மட்டும் நாங்க அடங்கி ஒடுங்கி தான் இருப்போம்..
எப்போவும் வியாழக்கிழமை கடைசி கிளாஸ் தெய்வானை மிஸ்ஸோட தமிழ்,,ஆனால் ஏதோ முக்கியமா நடத்தனும்னு கடன் வாக்கிட்டு அன்னைக்கு வந்தீங்க.எனக்கு பின்னால காதர், சரவணன், ராம்குமார்,என் பெஞ்சுல நான் சதீஸ், கணேசன். எனக்கு முன்னால பெஞ்சுல அசோக், சிவா. செந்தில்..திடீர்னு என் சட்டய பிடிச்சு இழுத்து கையில ஒரு துண்டு பேப்பர குடுத்தான். படிச்சு பார்த்தப்போ ”லட்சுமி தியேட்டர்ல சீன் படம் போட்டுருக்காங்க உங்க பெஞ்சுல எத்தன பேரு வர்றீங்க” அப்படியே முந்துன பெஞ்சுலயும் குடுத்து கேட்க சொல்லி இருந்தது....
அன்னைக்கு சாயங்காலம் நாங்க ஒன்பது பேருல கணேசன் வரலைன்னு சொன்னான். ஏண்டானு கேட்டதுக்கு ”வீட்டு பக்கத்துல தியேட்டர் இருக்கு வந்த்தா மாட்டிக்குவேன்னு சொன்னதும் நான் தான் சொன்னேன்.,,,மகாராணி தியேட்டர்லயும் போஸ்டர் பார்த்தேன். அங்க போகலாம் ...இன்னைக்கு போனாதான் உண்டு நாளைக்கு வெள்ளிக்கிழமை படத்தை மாத்திருவாங்க” அது மட்டுமில்ல அடுத்த வாரம் அரைப்பரீட்சை வந்துரும் எங்கயும் போக முடியாதுன்னு சொன்னதால கணேசன் வருவதும் உறுதியானது.
இளயராணி மகாராணி என ரெண்டு தியேட்டர் ஓரே காம்ப்ளக்ஸில். இளயரானியில ஒரு முன்னனி நடிகரின் படமும் மகராணியில இரவு சுந்தரிகளின் போஸ்டரும் ஒட்டி இருந்தது,,,
எந்த படத்துக்கு போனாலும் சரவணனும் காதரும் தான் டிக்கெட் வாங்குவது வழக்கம்...ஆனால் இளயராணி தியேட்டருக்கு பெண்கள் கூட்டம் வருவதால் உள்ள போக சங்கடப்பட்டு கொண்டிருந்த போது தான் “கொஞ்ச நேரம் இளயராணி வாசல்ல நிப்போம் மகாராணி கவுண்டர் திறந்ததும் உள்ள போகலாம் என உட்கார்ந்தோம்...மகாராணி கவுண்டர் திறந்ததும் இளயராணியின் வாசலில் உட்கார்ந்த பாதி கூட்டம் மகாராணி கவுண்டரை நோக்கி தான்...
பசங்க எல்லோரும் தியேட்டருக்குள்ள போயிட்டாங்க..நான் மட்டும் எனக்கான டிக்கெட்டை வாங்கிட்டு சைக்கிளை நிப்பாட்ட போன போது தான் உங்களைப் பார்த்தேன்.நீங்க இளயராணிக்கு வந்துருப்பீங்க என்னப் பார்த்தா நானும் அதுக்குதான்னு சொல்லிக்குவோம்ன்னு நினைச்சேன்...நீங்க என்னய பாத்தீங்க ஆனா பேசலை,,ஒருவேளை நீங்க என்னைய இளயராணி தியேட்டர் ரசிகனாக நினைத்திருக்கலாம்....
நான் மகாரானியில் சீட் பிடித்து உட்கார்ந்த 5 ஆவது நிமிடம் தியேட்டர் காரரின் டார்ச் வெளிச்சத்தில்நீங்க. நான் சைக்கிள் ஸ்டாண்டுல நடந்தத எல்லாம் பசங்க கிட்ட சொன்னேன்...
6.30 மனி ஆயிருந்தாலும் படம் போட்ட மாதிரி இல்ல ,ஏ ஆப்பரேட்டர் என ஆப்பரேட்டரை நோக்கி ஏக வசனக்கள் வீசியது நாங்க தான்...”வந்திருக்குறது சீன் படத்துக்கு இதுல எதுக்கு இப்படி கத்துறாங்க”ன்னு பின் இருக்கையின் முனுமுனுப்புக்கள்...
எல்லா இருக்கைகளும் நிரம்பிய பின்னர் ஒருவழியாக படம் போடப்பட்டது,,,படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தான் சரவணன் கத்த ஆரம்பிச்சான் செபாஸ்டியன் சார், கெமிஸ்ட்ரி சார் வாழ்க என.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது
”டே அவரு என்ன பார்த்துருக்காருடா நீ இப்படி கத்துனா எல்லாத்துக்கும் ரிவிட்டுதான் என நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல..”அவரும் தானே படத்துக்கு வந்துருக்காரு அதுக்கு மேல ஏதாவது ஆச்சுனா பார்த்துக்கலாம்”. மேற்கொண்டு கத்த அரம்பித்தனர் எல்லோரும். டே ஆப்பரேட்டர் பிட்டு போடுயா என அவரும் திட்டு வாங்கி கொண்டிருந்தார்...எனக்கு ரொம்ப பயமாகி இருந்தது...டே இடைவேளைக்கு அப்பறம் பிட்லாம் இல்ல என எதேதோ சொல்லி எல்லாத்தயும் கிளப்பி வீட்டுக்கு வந்த்துட்டேன்.
மறுநாள் உங்களுக்கு பயந்து நான் பள்ளிக்கூடம் வரல ..பசங்க கிட்ட விசாரிச்சதுல நீங்களும் பள்ளிகூடம் வரலைன்னு சொன்னாங்க,,,,
சனி ஞாயிறு விடுமுறை கழிந்து லேசான தைரியத்தோடு பள்ளிக்கு வந்தேன்..முதல் வகுப்பு முடிஞ்ச பத்து நிமிஷத்துல ஒருத்தன் என் பெயரை சொல்லி கிளாஸ்க்கு வந்து செபாஸ்டியன் சார் கூப்பிட்டார்னு சொல்லிட்டு போயிட்டான்,
நான் உசுர கையில புடிச்சுகிட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தேன்.எவன் எவன் அன்னைக்கு தியேட்டருக்கு வந்த்தீங்க எல்லா பயலும் இப்போ வரனும் ன்னு சொன்னீங்க. ஒன்பது பேரும் உங்க முன்னால இருந்தோம்..
ஒன்பது பேரும் ரெண்டு வரிசயில நின்னு இருந்தோம்...எனக்கு பின்னல ராம் குமார் மறைஞ்சு நின்னான்...எல்லோரும் அமைதியா இருக்க ,ராம்குமார் கம்மெண்ட் அடிக்க என்னால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்...இதை பார்த்த உங்களுக்குகு இன்னும் பல்ஸ் எகிற பளாரென உங்களின் அஞ்சு விரல்களில் மூன்றின் ரேகை என் கன்னத்தில் இருந்தது...
முடிவாக இனிமேல் இந்த மாதிரி பன்ன மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்..
சாப்பிட்டு முடிஞ்சு எல்லாரும் திரும்ப வரனும்னு சொல்லியிருந்ததால இன்னும் பிரச்சன முடியல என பயந்துகிட்டே திரும்ப மதியானம் வந்தோம்...
மதியம் நீங்க வேற மாதிரி இருந்தீங்க,,என் தோளில் கை போட்டீங்க. ”வாங்க டா” என யானைக்கல் பக்கம்,ஒரு ஜூஸ் கடைக்கு எல்லாரயும் கூட்டி போயி மிக்சர் ஜூஸ் வாங்கி குடுத்தீங்க,,,நானும் செந்திலும் ம் சர்பத் வாங்கி கொண்டோம்..
தம்பிகளா நான் உங்கள வேனும்னு அடிக்கல,நீங்க திய்யேட்டர் ல என்ன பத்தி சொன்னதுக்கு கூட அடிக்கனும்னு தோனல..
அப்பறம் எதுக்கு சார் அடிச்சீங்க நீங்களும் தானே படத்துக்கு வந்தீங்க? என செந்தில் கேட்க
டே உங்க வயசுல நானும் எவ்வளவோ சேட்டை பன்னிருக்கேன்...இந்த படம் பார்த்தது எல்லாம் பிரச்சனை இல்ல...நானும் மனுஷன் தான் நீங்களும் மனுஷன் தான் .ஆனா அப்பரேட்டரை திட்டுனது தான் என்னால எத்துக்க முடியல.. நீங்க மதுரையில எந்த எந்தத் தியேட்டர்லலாம் படம் பார்த்துருக்கீங்கன்ன கேட்டீங்க. எல்லா தியேட்டர்லயும் பார்த்துருக்கோம்ன்னு அசோக் சொன்னான். நியூ சினிமாவுல படம் பார்த்துருக்கீங்களா?ன்னு கேட்டீங்க, இல்ல சார் அந்த தியேட்டர் ல இப்ப படம் ஓட்டுறது இல்லைன்னான் செந்தில்.
”என் வீடு முனிச்சாலையில தான் ...அப்பா சகாயம் ..ஆப்பரேட்டர் சகாயம் புள்ளைனு தான் என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க...நியூ சினிமாவுல தான் வேல...எனக்கு விவரம் தெரியாத வயசுல பிலிம் ரோல் தான் எனக்கு விளயாட்டுப் பொருள்...நான் எவ்வளவோ தடவ என் அப்பாக் கூட போக முயற்சி பன்னுனேன். ஆனா அவர் கூட்டிப் போகவே மாட்டார்..ரொம்ப அடம் பிடிச்சதால ஒரு நாள் கூட்டிட்டு போனார்..மதுரை வீரன் ஓடிக்கிட்டு இருந்துச்சு திடீர்னு கரண்ட் போயிருச்சு அவன் அவன் திட்ட் ஆரம்பிச்சாங்க, ஆப்ரேட்டர் அவனே இவனேனு...எனக்கு கோபம் கோபமா வந்துச்சு...என்னால எதுவுமே பன்ன முடியல...என் அப்பா கிட்ட்ட கேட்டதுக்கு இது எல்லாம் அப்படித்தான் சல்லி பயலுக வர்ற இடம் இதுக்கு தான் உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன்..இங்க நடக்குறத பத்தி வீட்டுல அக்கா கிட்டலாம் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட போது எனக்கு வயசு பத்து இருக்கும்....
என் அம்மா கல்யானம் ஆகுறதுக்கு முன்னால திய்ட்டருக்கு போனது. என் அக்கா ரெண்டு பெரும் அவங்களுக்கு கல்யானம் ஆகற வரைக்கும் தியேட்டருக்கு போனதே இல்ல..
நீங்க எல்லாம் முன் சீட்டுல இருந்து கடைசி சீட் வரை படம் பார்த்துருப்பீங்க...ஆனா நான் ஆப்பரேட்டர் ரூம் ல இருந்து பார்த்தவன்...ஒரு சிவாஜி படம் நல்ல கூட்டம் . திடீர்னு கரண்ட் போயிருச்சு ..கூட்டத்துல ஒருத்தன் ஆப்பரேட்டர் கேபினுக்குள்ள தண்ணி குடிக்கிற டம்ளர் விட்டு எரிஞ்சான்..அது வெட்டுனதுலதான் இந்த தலும்பு...
சினிமாவும் சினிமா தியேட்டருக்கும் பொழுதுபோக்க தான் போறோம்.அங்க யார் மனசும் நோகுறா மாதிரி நடந்துக்காதீங்க”னு சொல்லிட்டு போயிட்டீங்க....
அன்னைக்கு ஜூஸ் கடையில உங்கள பாத்தது தான் கடைசி..அதன் பிறகு அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு நாங்க பள்ளிக்கு வந்த போதும் உங்கள பார்க்க முடியலை.பசங்க எல்லாம் நீங்க அரசாங்க வேல கிடைச்சு போயிட்டத நினைச்சு நிம்மதியோட சந்தோசமா இருந்தாங்க..ஆனா எங்க ஒன்பது பேருக்கு மட்டும் அது பெரிய இழப்பாக இருந்தது...
எங்க ஒன்பது பேரில் இப்போ நான் செந்தில் சரவணன் என மூன்று பேர் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம்...ஒருமுறை திருச்சி பஸ்ஸ்டாண்டில் கணேசனை பார்த்தேன். புதுகோட்டையில் செல்போன் கடை வைத்திருப்பதாக் சொன்னான்...சரவணன் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான்...உங்களை போல கதாப்பாத்திரம் கண்டிப்பா அவன் படத்துல இருக்கும்னு உங்கள பத்தி பேசும்போது சொல்லுவான்... செந்தில் ஒரு கல்லூரியில ஆசிரியராக வெலை பார்க்கிறான்..என்னதான் தொண்ட தண்ணி கிழிய கத்துனாலும் நம்ம கெமிஸ்ட்ரி மாதிரி நடத்த முடியலைனு சொல்லுவான்..
நான் இப்போ சினிமா புரெஜெக்டர் பழுது மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தில் பொறியாளனாக இருக்கிறேன்...வேலை விஷயமாக ஏதாவது தியேட்டருக்கு போனா ஆப்பரேட்டர் ரூம் வழியாக திரையை பார்க்கும்போதெல்லாம் உங்க முகம் தான் எனக்கு வரும்..எங்கப்பா ஏன் அவரு வேலைபாக்கற இடத்துக்கு என்ன கூட்டிட்டுப் போகவே இல்லைன்னு நீங்க பேசினதுக்கப்பறம்தான் புரிஞ்சுது சார்.
அன்னைக்கு ஒரு பெயருக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தோம்...நிஜமா உங்க கிட்ட நேருல பேசனும்னு நினைச்சப்போ நீங்க வேலயில இல்ல...
இப்போ கேட்குறேன் சார்.
“என்ன மன்னிச்சுருங்க சார்”
இப்படிக்கு
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்
12 03 2006
- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
http://kaattchi.blogspot.com/2010/07/4.html
வணக்கம் சார், என்ன ஞாபகம் இருக்கா சார்?
பனிரெண்டாவதுல எஸ்.ரெங்கசாமி பள்ளிகூடத்து ல முதல் மதிப்பெண் வாங்கினானே..அந்த செட் தான் நான்..ஏ செக்ஷன் ல கடைசி பெஞ்சுக்கு முந்துன பெஞ்சுல நடுவுல தான் நான் உட்கார்ந்து இருப்பேன்.உங்களுக்கு என்னையப் பிடிக்காது. எனக்கும் உங்களைப் பிடிக்காது, ஏன்னா நீங்க கேட்கும் மூலக்கூறு வாய்ப்பாடுகள் பெரும்பாலும் என்னை பார்த்தே இருக்கும்...இதனால் என் இருக்கையில் இருந்து கவனிச்சதை விட வாசல் நிலைக்கதவுக்கு முட்டு கொடுத்து கிளாஸ்ஸ கவனிச்ச நாட்கள் தான் அதிகம்... மேலும் நீங்க என்ன தான் நல்லா நடத்துனாலும் சிடு சிடு னு ரொம்ப கண்டிப்பான ஆள் என்பதுதான் என் வகுப்பில் இருந்த எல்லோருடைய பொது கருத்தும். நீங்க சீக்கிரமே வேலைய விட்டு போயிரனும்னு வேண்டிக்கிட்டவனுங்கள்ள நானும் ஒருத்தன்...மத்த வகுப்பில் எப்படி எல்லாமோ நாங்க இருந்த்தாலும் உங்க கிளாஸ் ல மட்டும் நாங்க அடங்கி ஒடுங்கி தான் இருப்போம்..
எப்போவும் வியாழக்கிழமை கடைசி கிளாஸ் தெய்வானை மிஸ்ஸோட தமிழ்,,ஆனால் ஏதோ முக்கியமா நடத்தனும்னு கடன் வாக்கிட்டு அன்னைக்கு வந்தீங்க.எனக்கு பின்னால காதர், சரவணன், ராம்குமார்,என் பெஞ்சுல நான் சதீஸ், கணேசன். எனக்கு முன்னால பெஞ்சுல அசோக், சிவா. செந்தில்..திடீர்னு என் சட்டய பிடிச்சு இழுத்து கையில ஒரு துண்டு பேப்பர குடுத்தான். படிச்சு பார்த்தப்போ ”லட்சுமி தியேட்டர்ல சீன் படம் போட்டுருக்காங்க உங்க பெஞ்சுல எத்தன பேரு வர்றீங்க” அப்படியே முந்துன பெஞ்சுலயும் குடுத்து கேட்க சொல்லி இருந்தது....
அன்னைக்கு சாயங்காலம் நாங்க ஒன்பது பேருல கணேசன் வரலைன்னு சொன்னான். ஏண்டானு கேட்டதுக்கு ”வீட்டு பக்கத்துல தியேட்டர் இருக்கு வந்த்தா மாட்டிக்குவேன்னு சொன்னதும் நான் தான் சொன்னேன்.,,,மகாராணி தியேட்டர்லயும் போஸ்டர் பார்த்தேன். அங்க போகலாம் ...இன்னைக்கு போனாதான் உண்டு நாளைக்கு வெள்ளிக்கிழமை படத்தை மாத்திருவாங்க” அது மட்டுமில்ல அடுத்த வாரம் அரைப்பரீட்சை வந்துரும் எங்கயும் போக முடியாதுன்னு சொன்னதால கணேசன் வருவதும் உறுதியானது.
இளயராணி மகாராணி என ரெண்டு தியேட்டர் ஓரே காம்ப்ளக்ஸில். இளயரானியில ஒரு முன்னனி நடிகரின் படமும் மகராணியில இரவு சுந்தரிகளின் போஸ்டரும் ஒட்டி இருந்தது,,,
எந்த படத்துக்கு போனாலும் சரவணனும் காதரும் தான் டிக்கெட் வாங்குவது வழக்கம்...ஆனால் இளயராணி தியேட்டருக்கு பெண்கள் கூட்டம் வருவதால் உள்ள போக சங்கடப்பட்டு கொண்டிருந்த போது தான் “கொஞ்ச நேரம் இளயராணி வாசல்ல நிப்போம் மகாராணி கவுண்டர் திறந்ததும் உள்ள போகலாம் என உட்கார்ந்தோம்...மகாராணி கவுண்டர் திறந்ததும் இளயராணியின் வாசலில் உட்கார்ந்த பாதி கூட்டம் மகாராணி கவுண்டரை நோக்கி தான்...
பசங்க எல்லோரும் தியேட்டருக்குள்ள போயிட்டாங்க..நான் மட்டும் எனக்கான டிக்கெட்டை வாங்கிட்டு சைக்கிளை நிப்பாட்ட போன போது தான் உங்களைப் பார்த்தேன்.நீங்க இளயராணிக்கு வந்துருப்பீங்க என்னப் பார்த்தா நானும் அதுக்குதான்னு சொல்லிக்குவோம்ன்னு நினைச்சேன்...நீங்க என்னய பாத்தீங்க ஆனா பேசலை,,ஒருவேளை நீங்க என்னைய இளயராணி தியேட்டர் ரசிகனாக நினைத்திருக்கலாம்....
நான் மகாரானியில் சீட் பிடித்து உட்கார்ந்த 5 ஆவது நிமிடம் தியேட்டர் காரரின் டார்ச் வெளிச்சத்தில்நீங்க. நான் சைக்கிள் ஸ்டாண்டுல நடந்தத எல்லாம் பசங்க கிட்ட சொன்னேன்...
6.30 மனி ஆயிருந்தாலும் படம் போட்ட மாதிரி இல்ல ,ஏ ஆப்பரேட்டர் என ஆப்பரேட்டரை நோக்கி ஏக வசனக்கள் வீசியது நாங்க தான்...”வந்திருக்குறது சீன் படத்துக்கு இதுல எதுக்கு இப்படி கத்துறாங்க”ன்னு பின் இருக்கையின் முனுமுனுப்புக்கள்...
எல்லா இருக்கைகளும் நிரம்பிய பின்னர் ஒருவழியாக படம் போடப்பட்டது,,,படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல தான் சரவணன் கத்த ஆரம்பிச்சான் செபாஸ்டியன் சார், கெமிஸ்ட்ரி சார் வாழ்க என.
எனக்குத் தூக்கி வாரிப்போட்டது
”டே அவரு என்ன பார்த்துருக்காருடா நீ இப்படி கத்துனா எல்லாத்துக்கும் ரிவிட்டுதான் என நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல..”அவரும் தானே படத்துக்கு வந்துருக்காரு அதுக்கு மேல ஏதாவது ஆச்சுனா பார்த்துக்கலாம்”. மேற்கொண்டு கத்த அரம்பித்தனர் எல்லோரும். டே ஆப்பரேட்டர் பிட்டு போடுயா என அவரும் திட்டு வாங்கி கொண்டிருந்தார்...எனக்கு ரொம்ப பயமாகி இருந்தது...டே இடைவேளைக்கு அப்பறம் பிட்லாம் இல்ல என எதேதோ சொல்லி எல்லாத்தயும் கிளப்பி வீட்டுக்கு வந்த்துட்டேன்.
மறுநாள் உங்களுக்கு பயந்து நான் பள்ளிக்கூடம் வரல ..பசங்க கிட்ட விசாரிச்சதுல நீங்களும் பள்ளிகூடம் வரலைன்னு சொன்னாங்க,,,,
சனி ஞாயிறு விடுமுறை கழிந்து லேசான தைரியத்தோடு பள்ளிக்கு வந்தேன்..முதல் வகுப்பு முடிஞ்ச பத்து நிமிஷத்துல ஒருத்தன் என் பெயரை சொல்லி கிளாஸ்க்கு வந்து செபாஸ்டியன் சார் கூப்பிட்டார்னு சொல்லிட்டு போயிட்டான்,
நான் உசுர கையில புடிச்சுகிட்டு ஸ்டாஃப் ரூமுக்கு வந்தேன்.எவன் எவன் அன்னைக்கு தியேட்டருக்கு வந்த்தீங்க எல்லா பயலும் இப்போ வரனும் ன்னு சொன்னீங்க. ஒன்பது பேரும் உங்க முன்னால இருந்தோம்..
ஒன்பது பேரும் ரெண்டு வரிசயில நின்னு இருந்தோம்...எனக்கு பின்னல ராம் குமார் மறைஞ்சு நின்னான்...எல்லோரும் அமைதியா இருக்க ,ராம்குமார் கம்மெண்ட் அடிக்க என்னால் அடக்க முடியாமல் சிரித்து விட்டேன்...இதை பார்த்த உங்களுக்குகு இன்னும் பல்ஸ் எகிற பளாரென உங்களின் அஞ்சு விரல்களில் மூன்றின் ரேகை என் கன்னத்தில் இருந்தது...
முடிவாக இனிமேல் இந்த மாதிரி பன்ன மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தோம்..
சாப்பிட்டு முடிஞ்சு எல்லாரும் திரும்ப வரனும்னு சொல்லியிருந்ததால இன்னும் பிரச்சன முடியல என பயந்துகிட்டே திரும்ப மதியானம் வந்தோம்...
மதியம் நீங்க வேற மாதிரி இருந்தீங்க,,என் தோளில் கை போட்டீங்க. ”வாங்க டா” என யானைக்கல் பக்கம்,ஒரு ஜூஸ் கடைக்கு எல்லாரயும் கூட்டி போயி மிக்சர் ஜூஸ் வாங்கி குடுத்தீங்க,,,நானும் செந்திலும் ம் சர்பத் வாங்கி கொண்டோம்..
தம்பிகளா நான் உங்கள வேனும்னு அடிக்கல,நீங்க திய்யேட்டர் ல என்ன பத்தி சொன்னதுக்கு கூட அடிக்கனும்னு தோனல..
அப்பறம் எதுக்கு சார் அடிச்சீங்க நீங்களும் தானே படத்துக்கு வந்தீங்க? என செந்தில் கேட்க
டே உங்க வயசுல நானும் எவ்வளவோ சேட்டை பன்னிருக்கேன்...இந்த படம் பார்த்தது எல்லாம் பிரச்சனை இல்ல...நானும் மனுஷன் தான் நீங்களும் மனுஷன் தான் .ஆனா அப்பரேட்டரை திட்டுனது தான் என்னால எத்துக்க முடியல.. நீங்க மதுரையில எந்த எந்தத் தியேட்டர்லலாம் படம் பார்த்துருக்கீங்கன்ன கேட்டீங்க. எல்லா தியேட்டர்லயும் பார்த்துருக்கோம்ன்னு அசோக் சொன்னான். நியூ சினிமாவுல படம் பார்த்துருக்கீங்களா?ன்னு கேட்டீங்க, இல்ல சார் அந்த தியேட்டர் ல இப்ப படம் ஓட்டுறது இல்லைன்னான் செந்தில்.
”என் வீடு முனிச்சாலையில தான் ...அப்பா சகாயம் ..ஆப்பரேட்டர் சகாயம் புள்ளைனு தான் என்ன எல்லாரும் கூப்பிடுவாங்க...நியூ சினிமாவுல தான் வேல...எனக்கு விவரம் தெரியாத வயசுல பிலிம் ரோல் தான் எனக்கு விளயாட்டுப் பொருள்...நான் எவ்வளவோ தடவ என் அப்பாக் கூட போக முயற்சி பன்னுனேன். ஆனா அவர் கூட்டிப் போகவே மாட்டார்..ரொம்ப அடம் பிடிச்சதால ஒரு நாள் கூட்டிட்டு போனார்..மதுரை வீரன் ஓடிக்கிட்டு இருந்துச்சு திடீர்னு கரண்ட் போயிருச்சு அவன் அவன் திட்ட் ஆரம்பிச்சாங்க, ஆப்ரேட்டர் அவனே இவனேனு...எனக்கு கோபம் கோபமா வந்துச்சு...என்னால எதுவுமே பன்ன முடியல...என் அப்பா கிட்ட்ட கேட்டதுக்கு இது எல்லாம் அப்படித்தான் சல்லி பயலுக வர்ற இடம் இதுக்கு தான் உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன்..இங்க நடக்குறத பத்தி வீட்டுல அக்கா கிட்டலாம் சொல்லக்கூடாதுன்னு கண்டிஷன் போட்ட போது எனக்கு வயசு பத்து இருக்கும்....
என் அம்மா கல்யானம் ஆகுறதுக்கு முன்னால திய்ட்டருக்கு போனது. என் அக்கா ரெண்டு பெரும் அவங்களுக்கு கல்யானம் ஆகற வரைக்கும் தியேட்டருக்கு போனதே இல்ல..
நீங்க எல்லாம் முன் சீட்டுல இருந்து கடைசி சீட் வரை படம் பார்த்துருப்பீங்க...ஆனா நான் ஆப்பரேட்டர் ரூம் ல இருந்து பார்த்தவன்...ஒரு சிவாஜி படம் நல்ல கூட்டம் . திடீர்னு கரண்ட் போயிருச்சு ..கூட்டத்துல ஒருத்தன் ஆப்பரேட்டர் கேபினுக்குள்ள தண்ணி குடிக்கிற டம்ளர் விட்டு எரிஞ்சான்..அது வெட்டுனதுலதான் இந்த தலும்பு...
சினிமாவும் சினிமா தியேட்டருக்கும் பொழுதுபோக்க தான் போறோம்.அங்க யார் மனசும் நோகுறா மாதிரி நடந்துக்காதீங்க”னு சொல்லிட்டு போயிட்டீங்க....
அன்னைக்கு ஜூஸ் கடையில உங்கள பாத்தது தான் கடைசி..அதன் பிறகு அரையாண்டு பரீட்சை லீவு முடிஞ்சு நாங்க பள்ளிக்கு வந்த போதும் உங்கள பார்க்க முடியலை.பசங்க எல்லாம் நீங்க அரசாங்க வேல கிடைச்சு போயிட்டத நினைச்சு நிம்மதியோட சந்தோசமா இருந்தாங்க..ஆனா எங்க ஒன்பது பேருக்கு மட்டும் அது பெரிய இழப்பாக இருந்தது...
எங்க ஒன்பது பேரில் இப்போ நான் செந்தில் சரவணன் என மூன்று பேர் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம்...ஒருமுறை திருச்சி பஸ்ஸ்டாண்டில் கணேசனை பார்த்தேன். புதுகோட்டையில் செல்போன் கடை வைத்திருப்பதாக் சொன்னான்...சரவணன் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கிறான்...உங்களை போல கதாப்பாத்திரம் கண்டிப்பா அவன் படத்துல இருக்கும்னு உங்கள பத்தி பேசும்போது சொல்லுவான்... செந்தில் ஒரு கல்லூரியில ஆசிரியராக வெலை பார்க்கிறான்..என்னதான் தொண்ட தண்ணி கிழிய கத்துனாலும் நம்ம கெமிஸ்ட்ரி மாதிரி நடத்த முடியலைனு சொல்லுவான்..
நான் இப்போ சினிமா புரெஜெக்டர் பழுது மற்றும் பராமரிக்கும் நிறுவனத்தில் பொறியாளனாக இருக்கிறேன்...வேலை விஷயமாக ஏதாவது தியேட்டருக்கு போனா ஆப்பரேட்டர் ரூம் வழியாக திரையை பார்க்கும்போதெல்லாம் உங்க முகம் தான் எனக்கு வரும்..எங்கப்பா ஏன் அவரு வேலைபாக்கற இடத்துக்கு என்ன கூட்டிட்டுப் போகவே இல்லைன்னு நீங்க பேசினதுக்கப்பறம்தான் புரிஞ்சுது சார்.
அன்னைக்கு ஒரு பெயருக்கு தான் உங்க கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி குடுத்தோம்...நிஜமா உங்க கிட்ட நேருல பேசனும்னு நினைச்சப்போ நீங்க வேலயில இல்ல...
இப்போ கேட்குறேன் சார்.
“என்ன மன்னிச்சுருங்க சார்”
இப்படிக்கு
தங்கள் கீழ்படிதலுள்ள மாணவன்
12 03 2006
- புஹாரி ராஜா
வெளியிட்டதற்கு நன்றி
http://kaattchi.blogspot.com/2010/07/4.html
Subscribe to:
Comments (Atom)
