அண்ணே நல்லா இருக்கியா? -தங்கச்சி
நேரத்துக்கு சாப்பிடுறயா? இது அம்மா
வேலை எல்லாம் எப்படிப்பா இருக்கு ? இது அப்பா
ஏண்டா வாரத்துக்கு ரெண்டு நாள் ஆவது
போன் பேசலாமே? - காதலி
கஷ்டமா இருக்காடா ? இது நண்பன்
என் கல்யாணத்துக்காவது வருவையா டா ?இது தோழி
தொலை தூர பயணத்தில்
வேலை பார்ப்பவனிடம்
கேட்கப்படும் கேள்விகளுக்கு
ஈமெயில் செல்போன் மூலம்
ஏதேதோ பதில்கள் சொல்லப்பட்டாலும்
அவனவன் டிரங்குபெட்டிக்குள்
பத்திரப்படுத்தப்பட்ட
சில பாஸ் போர்ட் சைஸ் போட்டோக்களிடமும் ,
எழுதி எழுதி அனுப்பப்படாமலிருக்கும்
கடிதங்களிடமும் மட்டுமே
இது போன்ற கேள்விகளுக்கான
நேர்மையான பதில் சொல்லப்படுகிறது ........
Wednesday, April 7, 2010
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
madurai tamilan avargaluku,
unga vaalkai dhaan kavidhaiya
kavidhaidhan vaalkaiya
iyalbana visanyangal.but
unga eluthukalil nirya vali irupadhai
unara mudiyudhu.nice keep it up
Post a Comment