
hello சரவனா நல்லா இருக்கியா டா? எங்க இருக்க?
நா நல்லா இருக்கேன் மாப்ள.இண்டர்வியூ போனயே என்னா ஆச்சு?
திங்க கிழமைல இருந்து வரச்சொல்லிட்டாங்கெடா.ஆனா திருச்சில வேல….சரிடா சாயங்காலம் எதும் வேல இருக்கா?னு கேட்டேன்.
ஏன் அப்டினு கேட்டான்…இல்ல வேலைக்கு போறோம் புது ட்ரெஸ் எடுக்காலாம்னு தான்…விளக்கு தூன் வரைக்கும் போகனும்….வர்றியா?னு கேட்டேன்…இல்லடா மாப்ள 5 மனிக்கு என் ஆளு தல்லாகுளம் கோவிலுக்கு கூப்டுருக்கா போகனும்னு சொல்லிட்டான்…இல்ல மாப்ளே 5 மனிக்குள வந்துரலாம் னு எப்படியோ போனிலேயே சமாதானபடுத்தி கடைக்கு கூப்பிட்டு போயிட்டேன்…மனி 4 அடித்ததிலிருந்த்தே அவனுக்குள் போன் வந்து கொண்டே இருந்தது..மாப்ளே "நா கிளம்புரேன் டா நீ வாங்கிட்டு பஸ்ல வந்துரு..தல்லாகுளம் வந்ததும் எனக்கு போன் பண்னு சேர்ந்து வீட்டுக்கு போயிரலாம்"னு சொன்னான்….இருடா இன்னும் கொஞ்ச நேரம் தான் சேர்ந்தே போயிரலாம் டா னு எவ்வளவோ சொன்னேன்….மாப்ளே கோவிச்சுக்காத ட…என் போன பாருடா னு குடுத்தான்…48 மிஸ்டு கால்…78 குறுந்த்தகவலும் ,போனில் மெமரி இல்லாததால் உள்ளே வர இன்னும் பல தகவல்களும் காத்திருந்த்தன…நீயே அத திறந்து பாருடா. னு சொன்னான்….இல்லடா உங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் வேனாம்னு சொன்னேன்…சும்மா பாரு என்ன இருக்கபோகுதுனு சொன்னான்….ஆர் யூ தேர் னு சுமார் 10 மெஸேஜ் கள் இப்படி படித்துக்கொண்டே டெலீட் செய்த போது புதுசா ஒரு மெஸேஜ்…”இப்படியே உன் ப்ரெண்ட்ஸ் கட்டிகிட்டே அழு….லவ் பன்ற எல்லாருக்கும் அனுமார் மாதிரி ப்ரெண்ட்ஸ் இருந்தா என் லவ்க்கு மட்டும் சகுனி மாதிரி வந்துறான்கெ…நானா வந்து உன்கிட்ட உன்ன லவ் பன்றேனு சொன்னதால தானே இப்படியெல்லம் பன்ற னு, இருந்துச்சு …இதுக்கு மேல படிச்சா நல்லா இருக்காதுனு அவன அனுப்பி வச்சேன்…கூடவே சொன்னேன்…அந்த குதிரவால் காரிக்கு ரொம்ப திமிரு டானு…
.நான் என்ன சகுனியா?எதுக்கு இப்படில்லாம் அவ பேசனும் அப்படி பன்னுனது தப்புனா இதுக்கும் மேல என்னென்னமோ நடந்தும் விடுடா பார்த்துக்கலாம் னு சொன்ன வெள்ளயம்மா எவ்வளவோ தேவலை போல னு தோனுச்சு…
வெள்ளயம்மாள் நடிகை ரேவதியை போல கொழு கொழு கன்னம்..அவளும் ரேவதின் தீவிர ரசிகை தான்...அந்த சோடா பாட்டிலுக்கு உள்ள ஊசல் ஆடிக்கிட்டு இருக்குற கோலி குண்டு போல எனக்குள்ள சில கேள்விகள் வந்து வந்து போகும்...எனக்கு யாரு ராஜா னு பேரு வச்சாங்க ,வேர வச்சுருக்களாமே.இப்போதைய விளம்பரங்களில் " டீச்சர் சொல்லித்தரலயா ஷேரிங்? இது போல அவளுக்கு ஏன் எந்த டீச்சரும் சின்ன பசங்களுக்கும் மரியாதை குடுக்கனும்னு சொல்லிதரல?இல்ல நாலாவது படிகிற வயசுல நான் மரியாதையை அவ கிட்ட எதிர்பார்த்தது தப்பா?,,,இவ கூட தம்பியோ தங்கச்சியோ ஏன் பொறக்கல?இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள்..
மேலூரில் என் பெரியம்மாவின் வீட்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன்..சங்கு ஊதும் ஆபிஸ் தெருவில தான் வீடு..வீட்டுக்கு பக்கத்துல கொஞ்சம் காலி இடம்..பக்கத்துல ஒரு சோடா கம்பெனி..இன்னும் கொஞ்சம் தள்ளி தள்ளி சில வீடுகள்…எங்க வீட்டுக்கு எதிரே நல்ல தண்ணி குழாய்.பக்கத்துல கல்யாண மண்டபம் இருக்கும்…பக்கத்து தெரு ஆரம்பிக்கும் இடத்தில் காலெஜ் பசங்க தங்கி படிக்கிற ஹாஸ்டல்…வீட்டுக்கு பக்கத்துல இருக்குற சோட கம்பெனி வெள்ளையம்மாள் குடும்பத்துக்கு சொந்தமானது..
இந்த வெள்ளையம்மாள் வேற யாரும் இல்ல ..என் அக்கா கூட படிச்ச பொன்னு… என் அக்காவின் நெருங்கிய தோழி..கிட்ட தட்ட எனக்கும் இன்னொரு அக்கா தான்..அவங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு….அதுக்கு இன்னோரு பெயர் இருக்கு கார்த்திகா, கார்த்திகா இந்த பெயர் தான் சர்டிபிகேட் ல எல்லாருக்கும் தெரியும்…ஆனால் அவுங்க பாட்டியோட பேருதான் வெள்ளையம்மாள் அந்த பெயரைதான் அதுக்கும் வச்சாங்க…வெள்ளையம்மா அப்டிங்கிற பேரு அவங்க சொந்தகாரங்களுக்கும் என் அக்கா போன்ற இன்னும் சிலருக்கு மட்டும் தான் இந்த வெள்ளயம்மா ரகசியம் தெரியும்….எனக்கு கூட தெரியாது…. .நானும் என் அக்காவும் பள்ளிக்கூடம் கிளம்பி இருப்போம்…அப்போ குண்டுக்காரர் ஜவுளிக்கடைக்கு நானும் ஒரு பிராண்ட் அம்பாஸிடர்…ஆமா எனக்கு குண்டுக்காரர் ஜவுளிக்கடை னு எழுதுன மஞ்சப்பைல என்னோட நோட்டு எடுத்து வச்சு ரெடியா இருப்பேன்…அப்போ வெள்ளயம்மாவும் என் அக்கா கூட சேர்ந்து போறதுக்கு வீட்டுக்கு வரும்..வந்தா சும்மா இருக்காது..என்ன பட்ட பேரு சொல்லி கூப்பிட்டுக்கொண்டே இருக்கும்…டேய் ஓட்ட பல்லா,, அப்டினு…எனக்கு எதிர்த்து முறையிட தெரியாமல் என் அக்கா கிட்ட சொல்லி அழுவென்…அப்போ என் அக்க சொல்லுவா..இனிமேல் அவ அப்டி சொன்னா வெள்ளயம்மானு சொல்லுனு…அதுல இருந்து நானும் அமைதியா இருப்பேன் ,பள்ளிக்கூடம் கெளம்பற நேரமா பார்த்து "போடி வெள்ளயம்மா"னு சொல்லிட்டு ஓடி போயிருவேன்…இனிமேல் நீ என்ன பட்ட பேரு வச்சு சொன்னா நானும் இப்டிதான் சொல்லுவேனு சொல்லி மிரட்டுவேன்….வெள்ளயம்மா அக்காவுக்கு கூட பொறந்தவங்கனு யாரும் இல்ல அதனால என்னய அதுக்கு ரொம்ப பிடிக்கும்…என் மேல ரொம்ப பாசமா இருக்கும்."நான் உன்ன கார்த்திகா அக்கானு சொல்லுவேன் நீயும் என்னய ராஜானு தான் சொல்லனும் அப்டினு கேப்பேன்…சேரிடா ஒட்ட பல்லா னு சொல்லும்…
எனக்கு சனிக்கிழமை லீவு விட்டா குண்டு வெளயாடுறதும் பம்பரம் வெளயாடவும் கெளம்பிருவேன்..வெள்ளயம்மா அக்கா அவுங்க சோடா கம்பெனி ல சோடா பாட்டிலுக்கு லேபிள் ஒட்டிகிட்டு இருக்கும்…குண்டு வெளயாடும்போது கண்ணாடி குண்டுகளை விட ஊதா கலர் சோடா குண்டு வச்சிருந்தா மரியாதை அதிகமா இருக்கும் .எல்லாரும் அந்த மாதிரியான குண்டுக்காக ஒவ்வொரு சோடா கம்பெனியின் பக்கத்து குப்பைமேட்டை சுத்திக்கிட்டு இருப்பானுக...எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. …
எனக்கு ஊத கலர் குண்டு எடுத்து வச்சு குடுக்கும்….அதுபோக வெள்ளிகிழமை ஒலியும் ஒளியும்,சனிக்கிழமை சிட்ரஹாருக்கு நடுவே வரும் தமிழ் பாட்டு நாயித்துகிழ்மை டெக் ல படம் சாயங்காலம் டிடி5 ல படம் னு அவுங்க வீட்டில இருப்போம்…வெள்ளயம்மா அக்காவுக்கும் பொழுது போகலைனா எங்க அக்கா கூட சேர்ந்து நொண்டி ,இல்லைனா புளியம்பழ முத்துல பல்லாங்குழியும் வெளயாடிக்கிட்டு இருப்பாங்க.. ……
இப்படித்தான் நான் .,வெள்ளயம்மா அக்கா, என் அக்கா என 5 பேரும் எங்க தின்னயில உட்கார்ந்து பரீட்ச்சைக்கு படிச்சுட்டு இருந்தோம்…நா படிச்சு படிச்சு ஒப்பிக்கிறதும் என் அக்கா 12 வதுக்கு படிக்கறதுமா இருக்கும்…நாங்க படிச்சிட்டு இருக்கும்போது நாலு பசங்க தன்னி புடிக்கிறதுக்காக எங்க வீட்டு எதுத்த பம்புல வந்து நின்னாங்க…நானும் படிச்சது போதும்னு சொல்லி ஓடி ப்போயிட்டேன்…அப்போ தான் என்னய எப்பவும் ஓட்ட பல்லா,கரச்சா மண்ட னு சொல்றா வெள்ளயம்மா அக்க என்ன மரியாதயா ராஜா எரும மாடு இப்படியே ஊரு சுத்திகிட்டு திரி னு சொல்லி கத்துனா,,,அன்னைக்கு அவ என்னய ஓட்டப்பல்லா னே சொல்லிருக்கலாம் னு இப்போ நினைச்சாலும் வலிக்குது….ஏன் அக்கா என்ன அப்டி நீ கூப்பிடல…..
அப்போதான் தண்ணி புடிக்க வந்த நாலு பசங்கள்ல ஒருத்தர் பேரு ராஜா…என்னடா நம்மள எதுக்குடா எரும மாடு னு ஒரு பொன்னு ஜாடயா திட்டுறானு நினைச்சு முறைச்சு பார்த்து இருக்கான்…அப்போ தான் ரெண்டு பேருக்கும் ஒரு அறிமுகம் கிடைச்சுருக்கு….அதுக்கு பின்னால் அந்த ராஜாவும் வெள்ளயம்மாவும் முறைக்கிறதும் என் அக்கா கிட்ட ராஜாவ பத்தி வெள்ளயம்மா நக்கல் பண்ணி சிரிக்கவும் ஆரம்பிச்சுருக்கங்க…இடையில நானும் ஒரு நாள் அவள வெள்ளயம்மானு கூப்பிடுறத கேட்டுட்டாங்க…அதுக்கு அப்புறம் எங்க வீட்டை கடந்து போறப்ப எல்லாம் அந்த நாலு பேருல ரெண்டு பேரு, பாலின் நிறம் வெள்ளை னு சொல்லி முடிக்க இன்னொருத்தன் அம்மாவுக்கு லெட்டெர் போட்டயாடானு கேட்க ஆரம்பிச்சாங்க…. அப்போ எல்லாம் டி வி ல சுன்னாம்புக்கான விளம்பரம் ரொம்பவே பிரபலம் அதை வைத்துகொண்டும் வெள்ளை வெள்ளை னு கத்திட்டு போக ஆரம்பிச்சாங்க. இந்த விஷயம் என் அக்கா தன் என் கிட்ட சொன்னா,,,,என்னோட ராஜா ன்ற பெயர அந்த ராஜாவ கூப்பிடறதுக்கும்,ஜாடயா பேசுறதுக்கும் யூஸ் பன்ன ஆரம்பிச்சுட்டா…இப்படியே சாயங்காலம் ஆனதும் இந்த விளயாட்டு தொடர்ந்து நடந்துக்கிட்டு இருந்துச்சு...ஒரு ரெண்டு நாள் வெள்ளயம்மாள் எங்க கூட இல்ல....அந்த ரெண்டாவது நாள் நான் வீட்டு முன்னால சைக்கிள் ஓட்ட பழகி கிட்டு இருந்த சமயம் ,அப்போ தான் பெரிய ராஜா என்ன கூப்பிடாரு...என்ன னு கேட்டேன்..நான் சைக்கிள் ஒட்ட சொல்லி தறேன் னு கூட்டி போனாரு,,,நான் மாட்டேனு சொல்லிட்டு வீட்டுக்குள்ள இருந்த என் அக்காவ பார்தென் அவ போகலாம்னு சொன்னா.அப்போ தான் அந்த அண்ணன் என் கிட்ட ஒரு லெட்டெர் குடுத்தார்...இத வெள்ளயம்ம கிட்ட கொடுத்துரு டா னு... நான் போயி குடுத்தென்....என்னய தான் படிக்க சொன்னா..."சத்தியமா நான் உங்கள கிண்டல் பண்ணலங்க,,,பசங்க தான் பண்ணிட்டாங்க...இனிமெல் இப்படி பண்ண மாட்டோம்...எங்களுக்கு பயந்து நீங்க வெளியில வராம இருக்க வ்ணாம்"னு இருந்துச்சு...அத படிச்சு எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டோம்...அதுக்கு வெள்ளயம்மா அக்காவும் சரிங்க னு பதில் எழுதி குடுத்தா...என் அக்காவும் வெள்ளயம்மாவும் என்னய அவங்க லவ்வுக்கு தூது அனுப்புறதுனு முடிவு பன்னிட்டாங்க…
ஒரு நாள் என் அக்க என் கிட்ட சொன்னா , கார்த்திகா உனக்காக ஊதா குண்டு எடுத்து வச்சுருக்காளாம் வந்து வாங்கிக்க சொன்னா?னு சொன்னா…நானும் ஆசயோட போனேன்…டேய் உனக்கு நா குண்டு தர்ரேன்…நா ஒரு பேப்பர் தர்ரேன்..இங்க தன்னி புடிக்க உசரமா ஒருத்தன் வருவான் ல அந்த அன்னன் கிட்ட குடுத்துருடா..ஆனால் பத்திறமா குடுக்கனும் படிச்சு பார்க்க கூடாதுனு கண்டிஷன் போட்டு குடுத்தாள்…நானும் கொண்டு போயி குடுத்தேன்…அவள் சொன்னது போலவே..
இந்த தடவ ராஜா என்னய அவுங்க ரூமுக்கு கூட்டி போனாரு.....நான் 12 வயசுலயே சேவல் பன்னையின் வாடையை நுகர்ந்து விட்டேன்.அவ்வப்போது வாசலில் அதிகமாகியும் குறைவதுமான செருப்புகள்…ஒரமா நாலைந்து டம்புள்ஸ்,அஜய் ஜடேஜா, கபில் தேவ் அசாருதீனின் வால் பேப்பர்களும் சில இந்தி நடிகைகளின் போட்டோக்களும் எஸ் பி பி யின் போட்டோக்களும் அலமாரிகளில் சில கோப்பைகளும் இருந்தன,,,தம்பி உன் பெயர் என்னடா?ன்ன படிக்கிற? அன்னே என் பேரு ராஜா அல் அமீன் ஸ்கூல்ல 4 வ்து படிக்கிறேன்...உங்க பேரு? என் பேரும் ராஜா தான்...னு சொல்லிகிட்டே ஒரு கடைக்கு கூட்டி போனாரு என்ன வேனும் ? ஒன்னும் வேணாம் அண்ணே, எதாச்சும் சாப்புடு டா.. சேரி னே எனக்கு தேன் மிட்டாய் வாங்கி குடுங்க,,,,ஒரு ரூபாய்க்கு 20 , 5 காசு தேன் மிட்டாய் சாப்பிட்டுகிட்டே வீடு வ்ந்து வெள்ளயியம்மா அக்கா கிட்ட அவர் குடுத்த லெட்டெர குடுத்தேன்,,,இப்படி வாரத்துக்கு ரெண்டு தடவ நான் அவர் ரூம்க்கு போயிட்டு வந்து,அக்கா அந்த அன்னே சூப்பரா பாடுராருக்கா...பாட்டு புக் வச்சுருக்காரு...எனக்கு கனக்கு லாம் நல்லா த்ரியும் உனக்கு சந்தேகம் னா என்கிட்ட கேளுனுலாம் சொல்ராரு அக்கா...ரொம்ப நல்ல அன்னே ஆனா சிகரட்டு தான் குடிக்கிறாரு...எனக்கு அப்போ மட்டும் வாந்தி வர்றா மாதிரி இருக்கு னு நான் கூட சர்டிபிகேட் குடுக்க ஆரம்பிச்சேன்....ஒவ்வொரு முறையும் நான் லெட்டெர் வாங்கி கொண்டு வந்து குடுக்கும் போதெல்லாம் வெள்ளயம்மா மட்டும் படிச்சுட்டு தனியா சிரிக்கிறத பார்க்கும்போது என்ன லூசு மாதிரி ஆயிட்டானு தோனும்....
வெள்ளயம்மா வும் என் அக்காவும் டைப் ரைட்டிங் கிளாஸ் போகனும்னு வீட்டுல கேட்க ஆரம்பிச்சாங்க….என் அக்கவுக்காக வெள்ளயம்மா எங்க வீட்டுலயும் வெள்ளயம்மாவுக்காக என் அக்கா அவுங்க வீட்டுலயும் பேசி அனுமதி வாங்குனாங்க….எங்க வீட்டுல என் அக்காவுக்கு செக்யூரிட்டியா என்னய அனுப்பிச்சாங்க…அங்கதான் ஏற்கனவே ராஜா படிக்கிறார்னு…அவருக்க்காக தான் இவ அங்க சேர்ந்து படிச்சுருக்கா…கிளாஸ் முடிஞ்சு வரும்போது எங்க மூனு பேருக்கும் முன்னால ராஜாவும் அவரோட நண்பர் குமாரும் முன்னாடி நடந்து போவங்க… செக்கடிக்கிட்ட இருக்குற ரைஸ் மில் பக்கத்துல ஒரு சந்து இருக்கும்……அங்க பெரும்பாலும் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது….ஒரு முனையில யாரும் வர்றாங்களா னு நானும் இன்னோரு பக்கம் குமார் அண்ணனும் பாத்து சொல்லுவோம்…ன் அக்கா வெள்ளயம்மாவுக்கு துனைக்கு நிப்பா…இப்படியும் அவங்க நட்பு(?) தொடர்ந்துச்சு.சோடாவுக்கும் தொண்டைக்கும் நடுவே உள்ள கோலி குண்டு போல தான் அவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான்…
இப்படித்தான் பள்ளிகூடத்த கட் அடிச்சுட்டு வெளில போறதுக்கு எப்படினு என் ரெண்டு அக்காவும் திட்டம் போட்டுகிட்டு இருந்தாங்க,,,, அப்போ நான் தான் ஐடியா குடுத்தேன், அக்கா நம்ம வீட்டுல இருக்க பர்தா வ எடுத்து அந்த அக்கா கிட்ட குடுத்துரலாம்னு….அதுக்கும் நான் தான் வீட்டுல பேசனும்னு சொல்லிட்டா,,,
பெரியம்மா, " பள்ளிகூடத்து நாடகத்துல சேர்ந்து இருக்கேன்…அதுல ஒரு பிள்ளைக்கு பர்தா வெணும்" னு சொல்லி வெள்ளயம்மா அக்கா கிட்ட வாங்கி குடுத்தேன்….அண்ணைக்கு அவுங்க வெளில போயிட்டு வந்தாங்க…நான் போயி பர்தா கேட்டேன்…. அதுக்கு அவ சொன்ன பதிலுக்கு எனக்கு உசுரே போயிருச்சு…..ஆமா அவளோட ஞாபகார்த்தமா இருக்கட்டும்னு ராஜா கொண்டு போயிட்டாராம்…எனக்கு வீட்டுல எப்படி சொல்லி சமாளிக்கனே தெரியல…என் அக்கா ன் நிலமய பார்த்து சிரிசுகிட்டு இருந்தா… ஒரு மூனு நாள் கழிச்சு வீட்டுல சொன்னேன் , பள்ளிகூடத்துல மிஸ் பர்தா வ தொலச்சுட்டாங்க னு,,,, அவ்ளோ தான் என்ன ய சாகடிக்காத குறை தான்…இனி மேல் அதுல சேரனும் இதுல சேரணும்னு வ்ந்த வெளக்கமாறூ பிஞ்சுரும்னு திட்டிட்டாங்கெ,,,, அப்போ கூட என் அக்கா பயந்தா,எங்க நா சொல்லிகுடுத்துருவெனோ னு…
.
திரும்பவும் லெட்டெர் குடுக்க சொன்னா வெள்ளயம்மா.அப்போதான் கேட்டென் அக்கா உனக்கு அந்த அண்ணன புடிக்குமா னு....ரொம்ப புடிக்கும் டா னு சொன்னா....நீ ஷவர் பாத்ல குளிச்சுருக்கயா? னு கேட்டா நான் பார்த்தது கூட இல்லக்கா னு சொன்னேன்... அப்போ பக்கத்துல ஒரு பாலித்தீன் பயில என் அருணா கயிரு ஊக்குல அங்க அங்க ஒட்டை போட்டு தன்னிய நிரப்பி என்னய நனய வச்சா,,அக்கா உனக்கு ரொம்ப அறிவு னு சொன்னேன்...நான் கண்டு புடிக்கல டா ராஜா தான் இப்படி எனக்கு சொல்லி குடுத்தாரு,எனக்கு கூட ஒரு நாள் இப்படி பன்னுனாரு னு சொன்னா..
அக்கா எனக்கு முழு பரிச்சை ஆரம்பிச்சுரும் இனிமேல் வெளியே வந்தா எங்க பெரியம்மா திட்டும்....பரீட்சை முடிஞ்சு வரேன் கா னு சொல்லிட்டென்....இதே பதிலை தான் ராஜா அன்னன் கிட்டயும் சொன்னேன்.அப்போதான் அவர் கை பார்த்து என்ன அன்னே கையில புண்ணு னு கேட்டதுக்கு சும்மா னு சொன்னாரு....அப்போதான் குமார் அன்னென் சொன்னாரு ல்லாம் உன் அக்கா காரி பண்ணுன வேல தான்... சும்மா ஊரு சுத்த தானே பழகுறனு சொல்லிருக்கா , அதுக்கு அடுப்பில கை வச்சுட்டான் னு சொன்னாரு...ராஜா அண்ணே சிகரட்ட ஸ்டைலா தூக்கி போட்டு பிடிப்பீங்க அது மாதிரி பன்னுங்க னு சொன்னேன்….அய்யய்யோ சிகரட்டு குடிச்சா உடம்பு கெட்டு போயிரும் டா அதுனால் நானும் இப்போலாம் சிகரட் குடிக்கிறது இல்ல னு சொன்னாரு…...குமார் அண்ணே ன் கிட்ட "ஏன் ட இப்படி அடிக்கடி இங்க வரும்போது இட்டுல உங்க அக்காவ தாவது செஞ்சு குடுத்தனுப்ப சொல்லலாம் ல னு சொன்னதுக்கு. ராஜா அண்ணே எங்க டா அவளுக்கு சாப்பிடவே நா தான் சொல்லி குடுத்தேன்..அவளுக்கு முதல்ல சாப்பிட கத்து குடுக்கனும் அப்புறம் தான் சமைக்க கத்துகுடுக்கனும்னு சொன்னார்..உடனே அவர் பக்கதுல ஒரு கடைக்கு போயி உன் அக்காவுக்கு என்னட பிடிக்கும் னு கேட்டாரு...நான் கார்திகா அக்காவுக்கு ரேவதினா புடிக்கும் னு சொன்ன்னேன்...உடனே நடிகை ரேவதி கையில விளக்கு வச்சுகிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொன்ன வாழ்த்து அட்டையை கூடவே அவரே அரச்சு வச்ச கொஞ்சம் மருதாணியும் குடுத்து அனுப்ப ,அதை பத்திரமாக கார்த்திகா கிட்ட குடுத்துட்டேன்...அந்த சோடா கம்பெனி கதவுல ஒட்டி ரசிச்சுகிட்டே இருக்கும்,,,,,ஆனால் ஒரு நாள் கூட அவர்களுக்குள் பரிமாறப்பட்ட கடித்தத்தை நான் பிரித்து பாத்தது இல்லை.....இப்போதெல்லாம் பின் இரவுகளை தாண்டி வரும் குட் நைட் எஸ் எம் எஸ் களில் கார்த்திகாவின் காதலும் வளர்ந்திருந்தால் என் போன்றவர்கள் தேவை பட்டிருக்க் மாட்டார்கள்...
பரிச்சை முடிஞ்சு திரும்பவும் நான் போயி லெட்டெர் குடுக்க ஆரம்பிச்சேன்.....அன்னைக்கு ரூம் பூட்டி கிடந்துச்சு...அக்கா குடுத்த ல்ட்ட்ர பத்திர்மா கொண்டு படிக்கட்டுல இறங்கினது தான் தாமதம்....கார்திகாவின் சோடா கடைக்கு தவனை வசூலிப்பவன் என்னடா இங்க ன்ன பன்னிகிட்டு இருக்க? கையில ன்ன னு கெட்டான் அந்த மீசைக்காரான்...ஒன்னும் இல்லைனு சொல்லிட்டு வந்துடேன்...நேரா வந்து அக்கா அந்த லெட்டர உங்க கடைக்கு தவனை குடுக்குற ஆளு வாங்கிட்டருக்கா னு நா சொல்லிகிட்டு இருக்கும்போதே பொல பொல வென அழுதுக்கிட்டே சொன்னா விடுடா பார்த்துக்கலாம் னு......அக்கா அழுகாத அக்கா னு நா என்னால முடிஞ்சவரைக்கும் சொன்னேன்...என் அக்கா கிட்டயும் நடந்தத சொன்னேன்....... அவளும் பதறிப்போனாள்....
மறுநாள் வெள்ளயம்மாளின் குடும்ப ஆட்கள் என் பெரியம்மா கூட சண்ட போட ஆரம்பிச்சுட்டாங்க....என்னய பார்த்து "முளைச்சு 3 இலை விடல இத்ல்லாம் மாமா வேல பார்க்குதுனு".....எனக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாமல் என் பெரியம்மாவின் முந்தானைக்குள் என்னை மறைத்துக்கொண்டேன்.....அதன் பின் கோடை விடுமறைக்கு என் அம்மா என்னய மதுரைக்கு கூட்டி போயிட்டாங்க.....
ரெண்டு மாசத்துக்கு அப்புறம் திரும்பவும் ஊருக்கு போனேன்,,,சோடாகம்பெனி பேன்சி ஸ்டோராக உருமாறியிருந்தது....
அந்த புது பேன்ஸி ஸ்டோரில் கூட நடிகை ரேவதியின் படம் தான்
வரஞ்சுருந்தாங்க.எனக்கு ஒன்னுமே தெரியல.....என் அக்கா கிட்ட கேட்டேன்,,,கார்த்திகா அக்கா எங்க னு..? அவ செத்து போயி ஒன்னரை மாசம் ஆச்சு...எல்லாரும் வீட்டை காலி பன்னிட்டு வேற ஊருக்கு போயிட்டாங்க னு .என்னா ஆச்சுக்கா னு கேட்டென்..அந்த ராஜாவ கார்த்திகா சித்தப்பாவும் மாமாவும் அடிச்சு மிரட்டிட்டாங்க….அதுக்கப்பறம் அவன் என்ன ஆனான் னே தெரியல.,,இவ வீட்டுலலா கல்யாணத்துக்கு மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க..அப்போ அவ சித்தப்பா சொல்லிருக்காரு இன்னும் அந்த பயல நெனச்சுகிட்டு இருக்காத அவன் இப்போ மண்ணுக்குள்ள இருப்பான் நீ அழுதாலும் அவனுக்கு கேட்காது னு சொல்லிருக்காரு...அதனால் சோடா கம்பெனியில தீ வச்சுக்கிட்டா ...வெளியில எல்லார் கிட்டயும் ,சோடா சுத்தும் போது சிலிண்டர் வெடிச்சுருச்சுனு சொல்லிட்டாங்கனு சொல்லி அழுக ஆரம்பிச்சுட்டா,,
அவளோட கண்ணீரும் சிரிப்பும் ராஜாவுக்கு கேட்கனும்ங்கறதுக்காக அப்படி செஞ்சாளா? இப்படித்தான் காதல் னு தெரியாமலே காதலுக்கு புறா வா தூது போயி ஒரு பொணந்திண்ணி கழுகாக மாறிப்போனேன்….அப்போது தான் நான் சகுனிகளுக்கெல்லாம் சகுனியாக இருந்த்திருக்க கூடும்…ஒருவேள இப்போ இருக்கிறமாதிரியே அப்போவும் செல்போன் எல்லாம் இருந்துச்சுனா அடிக்கடி குண்டு கேட்க போயிருந்தா நான் அவளுக்கும் சகுனியாகவே தெரிஞ்சுருப்பேனோ?.....எது எப்படியோ அவள் பெயரைப்போலவே அவள் மரணத்தின் உன்மையும் யாருக்கும் தெரியைல்லை.... பேருந்தில் சன்னலோர பயணம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது…ஆனால் குண்டும் குழியுமான கிராமத்து சாலைகளில் எதிரே வரும் வண்டிக்காக வழிவிடும் போது சாலையின் கருவேல மரங்களுக்கு நடுவே பயணம் செய்யும் போது சன்னல் பயனத்தை ரசிப்பவன் யாரும் இருக்க முடியாது…இப்போதெல்லாம் எந்த கடைகளிலும் குண்டு சோடா தென்படுவதில்லை.அப்படியே அபூர்வமாக தெரிந்தாலும் அதை பார்க்கும் போதெல்லாம் வெள்ளையம்மாள் மட்டுமே சட்டென வந்து போகிறாள்...என் நண்பனின் காதலி சொன்னது போல் நான் சகுனியாக கூட இருந்துவிட்டு போகிறேன் ஆனால் இனிமேலும் அனுமார் போல் ஆவதுக்கு எனக்கு தைரியம் இல்லை….
